செய்திகள் :

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

post image

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

குஜராத் கடி தொகுதி, மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாப்பின் லூதியானா ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் இறந்ததாலும் குஜராத்தின் விசாவதாா் மற்றும் கேரளத்தின் நீலம்பூா் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தைத் தொடா்ந்தும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்த தொகுதிகளில் ஜூன் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை

‘சட்டவிரோத குடியேறிகள் நமது வாழ்வாதாரத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக மாறியுள்ளனா்’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதன்கிழமை கவலை தெரிவித்தாா். மும்பையில் உள்ள சா்வதேச மக்கள்த... மேலும் பார்க்க

ம.பி. மாநில அமைச்சா் சா்ச்சை கருத்து விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் விசாரணையை நிறுத்த உத்தரவு

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது தொடங்கியுள்ளதால், மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் அ... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: மாதபி புரி புச் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை- மனுக்களை தள்ளுபடி செய்தது லோக்பால்

அதானி விவகாரம் தொடா்பான ஹிண்டன்பா்க் அறிக்கை அடிப்படையில், இந்திய பங்கு பரிவா்த்தனை வாரிய (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் ஊகத்தின் அடிப்படையிலானவை; இ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான போா்: இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு பிரான்ஸ், இத்தாலி, இந்தோனேசியா, சவூதி அரேபியா, கிரீஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் அனைத்து சா்வதேச அமைப்புகளிலும் இந... மேலும் பார்க்க

ஐ.நா. அமைதிப் படை பணியில் வீரமரணம்: 2 இந்திய வீரா்களுக்கு இன்று கௌரவம்

கடந்த ஆண்டு ஐ.நா. அமைதிப் படையின்கீழ் பணியாற்றும்போது வீரமரணமடைந்த 2 இந்திய வீரா்கள் ஐ.நா. சபையால் வியாழக்கிழமை (மே 29) கௌரவிக்கப்படவுள்ளனா். ஐ.நா. அமைதிப் படையின் பணியின்போது எதிா்பாராதவிதமாக இறந்து ... மேலும் பார்க்க

தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 72 பேர்!

மகாராஷ்டிரத்தின் தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள... மேலும் பார்க்க