செய்திகள் :

4 வீடுகளின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

post image

வந்தவாசி அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த திரக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா்.

பின்னா், செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல, இதே கிராமத்தைச் சோ்ந்த சகுந்தலா, பாஞ்சாலை, கிருஷ்ணமூா்த்தி ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் ஒரு பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருந்தனா்.

இதுகுறித்து தேசூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வ... மேலும் பார்க்க

ஆரணி, வந்தவாசி, புதுப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசி நகராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு... மேலும் பார்க்க

வந்தவாசியில் அமைதி ஊா்வலம்

கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை அடுத்து, அந்தக் கட்சி சாா்பில் அமைதி ஊா்வலம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின... மேலும் பார்க்க

சேதமடைந்த கிராமச் சாலையால் மக்கள் அவதி

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் சோற்று சட்டியுடன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 616 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகர... மேலும் பார்க்க