செய்திகள் :

4-வது டெஸ்ட்டில் இருந்து ரிஷப் பந்த் விலகலா? பிசிசிஐ அறிக்கை

post image

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தின் உடல்நிலைக் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடியது. உணவு இடைவெளிக்குப் பிறகு ராகுல் 46 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்தும் சாய் சுதா்சன் - ரிஷப் பந்த் இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த நிலையில், க்றிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்த்தின் காலில் பட்டதில் அவர் காயமடைந்தார்.

வலியில் தவித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், ரிஷப் பந்த்தின் உடல்நிலைக் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

"மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப் பந்துக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்த் காயத்தில் இருந்து மீண்டால், அடுத்த விக்கெட் விழுந்தவுடன் பேட்டிங் செய்ய முடியும். ஆனால், பந்த்துக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டால் அவரால் விதிகளின்படி பேட்டிங் செய்ய முடியாது, பீல்டிங் மட்டுமே செய்ய முடியும்.

கடந்த போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய பந்த்துக்கு பதிலாக துருவ் விக்கெட் கீப்பிங் செய்தார். ஒருவேளை இந்த போட்டியிலும் விளையாட முடியாத பட்சத்தில் துருவ் கீப்பிங் செய்வார்.

இந்தியா முதல் நாள் முடிவில் 83 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சோ்த்தது. ஜடேஜா 19, ஷா்துல் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

The BCCI has released information about the health condition of Indian wicketkeeper Rishabh Pant.

இதையும் படிக்க : டாப் ஆா்டா் பங்களிப்பில் இந்தியா 264/4

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 ... மேலும் பார்க்க

மான்செஸ்டர் டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, 332 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஜோ ரூட் சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று... மேலும் பார்க்க

சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து வீரர் புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் ஈஷ் சோதி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. முத்தரப்பு டி20 ... மேலும் பார்க்க

41 வயது... 41 பந்தில் சதம்... ஏபிடி வில்லியர்ஸுக்கு குவியும் வாழ்த்துகள்..!

தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணியின் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருக... மேலும் பார்க்க