செய்திகள் :

5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

post image

திருவள்ளூா் அருகே ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேரை கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு திருவள்ளூா் வழியாக இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக வெள்ளவேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெள்ளவேடு போலீஸாா் திருமழிசை பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே போலீஸாா் அவா்களை வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், செங்கல்பட்டு அடுத்த மோகன்வாடி ஷாஜகான் (21), திருவள்ளூா் விக்னேஷ் (32), தொழுவூா் ராஜ்குமாா் (38) என்பது தெரியவந்தது.

மேலும், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க