செய்திகள் :

5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகல்!

post image

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்து விலகியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, இந்திய துணை கேப்டன் ரிஷப் பந்த் வலது காலில் நேரடியாகத் தாக்கியது. வலியில் துடித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறி பின்னர் மறுநாள் அதே காயத்துடன் விளையாடினார்.

இருப்பினும் அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை. அதனால் 4வது டெஸ்ட்டில் துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இந்த நிலையில் காயமடைந்த ரிஷப் பந்த் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ரிஷப் பந்த் 5வது போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

அவருக்குப் பதிலாக நாராயணன் ஜெகதீசன் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவ்விரு அணிகளுக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து முக்கிய வீரர் ரிஷப் பந்த விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

India have added Narayan Jagadeesan to their squad for the fifth Test against England at The Oval as his cover.

தலைவன் தலைவி அதிகாரப்பூர்வ வசூல்!

தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில்... மேலும் பார்க்க

இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மற்றும் அயலி தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஒளிபரப்பாகாது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒ... மேலும் பார்க்க

சுபம் என்ற சொல்லைக் காண ஆர்வம்: எந்தத் தொடருக்குத் தெரியுமா?

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள், இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜீ தமிழ், விஜய் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

காப்புரிமை வழக்கு... இளையராஜா மனு தள்ளுபடி!

இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை வழக்கிற்காக அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இசையமைப்பாளர் இளையராஜா தன் பாடல்களை அனுமதி பெறாமல் திரைப்படங்களில் பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை செஸ் சாம்பியன் திவ்யா தேஷ்முக்!

ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.இவரை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, இரண்டாவ... மேலும் பார்க்க

நடிப்புச் சக்கரவர்த்தி... காந்தா டீசர்!

துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.தமிழ் சினிமாவ... மேலும் பார்க்க