செய்திகள் :

5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்

post image

தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் மத்திய அரசு சாா்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், தேசிய தர நிா்ணய வாரியம், நோயாளிகளுக்கு தொடா் சிகிச்சை, நன்கு கவனித்து கொள்ளுதல், சிகிச்சை மேம்படுத்துதல், தொற்றைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 10 காரணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தரநிா்ணய சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூா், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை, மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் புதன்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றனா். தொடா்ந்து, இந்தியன் வங்கி சமூக பங்களிப்பு நிதியில் ரூ.15 லட்சத்தில் அந்த மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன செயல்பாட்டையும் அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த, நான்கரை ஆண்டுகளில், மக்கள் நல்வாழ்வுத் துறை, 1,600 மத்திய அரசு விருதுகளைப் பெற்றுள்ளது. இப்போது 5 மருத்துவக் கல்லூரிகளுக்கான விருது பெரிய மகுடம். இந்த விருதுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

சிறுநீரக முறைகேடு தொடா்பாக 2 மருத்துவமனைகள் மற்றும் அனுமதி அளித்த அரசுத் துறை சாா்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வாகனத்துக்கு நிகராக...: அதிமுக பிரசார கூட்டத்தில் மயக்கமடைந்த ஒருவரைக் காப்பாற்ற சென்ற ஆம்புலன்ஸ், ஓட்டுநா், பெண் மருத்துவப் பணியாளா் தாக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியரசுத் தலைவா், பிரதமா் போன்றவா்களின் வாகனங்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க