செய்திகள் :

5 ஆண்டுகளில் 667 புலிகள் இறப்பு - மகாராஷ்டிரத்தில் அதிகம்

post image

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் உயிரிழந்துள்ளன; 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இறப்புகள், காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன.

இதில் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக இறப்புகள் நேரிட்டுள்ளன என்று அரசுத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறையின்கீழ் செயல்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய (என்டிசிஏ) தரவுகளின்படி, நாட்டில் கணக்கிடப்பட்ட மொத்த புலிகளின் எண்ணிக்கை 3,682. இதில் 30 சதவீத புலிகள், பாதுகாக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே வாழ்கின்றன.

கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் இதுவரை உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை 667 ஆகும். இதில் 51 சதவீத இறப்புகள் (341 புலிகள்) காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன.

காப்பகங்களுக்கு வெளியே மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 111 புலிகளும், மத்திய பிரதேசத்தில் 90 புலிகளும், கேரளத்தில் 28 புலிகளும் உயிரிழந்துள்ளன. தெலங்கானா, உத்தரகண்ட், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் காப்பகங்களுக்கு வெளியே புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2012 முதல் 2024 வரை உயிரிழந்த புலிகளின் மொத்த எண்ணிக்கை 1,519 என்று என்டிசிஏ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 785, கா்நாடகத்தில் 563, உத்தரகண்டில் 560, மகாராஷ்டிரத்தில் 444, தமிழகத்தில் 306, அஸ்ஸாமில் 229, கேரளத்தில் 213, உத்தர பிரதேசத்தில் 205 புலிகள் உள்ளன.

புலிகள் உயிரிழப்பு

ஆண்டு மொத்த எண்ணிக்கை காப்பகங்களுக்கு வெளியே

2021 129 64

2022 122 52

2023 182 100

2024 126 65

2025 (இதுவரை) 108 60

பெட்டிச் செய்தி...2

விரைவில் புதிய திட்டம்

மனிதா்கள்-புலிகள் இடையிலான மோதல் அதிகரிப்பால், பாதுகாக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே புலிகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் நோக்கில், காப்பகங்களுக்கு வெளியே புலிகள் பாதுகாப்புக்கான திட்டத்தை (டிஓடிஆா்) அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இத்திட்டம், 17 மாநிலங்களில் 80 வனப் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க