செய்திகள் :

'50 சிசேரியன்' செய்த வசூல்ரஜா MBBS; 10 வருட 'போலி' மருத்துவர் - சிக்கியது எப்படி?

post image

கமல் நடிப்பில் வந்த காமெடி படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் போல நிஜ வாழ்க்கையில் வலம் வந்த போலி மருத்துவர் அசாம் மாநிலத்தில் சிக்கியுள்ளார்.

சில்சார் என்ற நகரில் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் எனக் கூறிக்கொண்ட இவர், 50க்கும் மேற்பட்ட சிசேரியன்களைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Gynaecology
Gynaecology

அங்கிருக்கும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார் புலோக் மலகார் என்ற அந்த நபர்.

மற்றுமொரு பிரசவத்துக்கான சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் முன்னர் ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்தே இவரைக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

Fake Doctor
Fake Doctor

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மூத்த போலீஸ் அதிகாரி நுமல் மஹத்தா, "எங்களுக்கு அவரைப் பற்றி தகவல் கிடைத்தது விசாரித்து வந்தோம். எல்லா ஆவணங்களையும் சரிபார்த்தபோது அவரது சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரியவந்தது. அவர் ஒரு போலி மருத்துவர், பல ஆண்டுகளாக இதைச் செய்துவந்துள்ளார்." எனக் கூறியுள்ளார்.

அசாமில் போலி மருத்துவர்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஹிமந்த சர்மா தலைமையிலான அரசாங்கம், மாநில காவல்துறையுடன் நெருக்கமாக செயல்படும் ஒரு சிறப்புப் பிரிவை (போலி எதிர்ப்பு மற்றும் விஜிலன்ஸ் பிரிவு) உருவாக்கியது.

இந்த பிரிவு இதுவரையில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் போலி மருத்துவர்கள் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களைக் குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர்.

வழக்கறிஞர் கொலை வழக்கு; 90 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - நடந்தது என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம். இவரது சித்தப்பா தண்டபாணி (60). இவருக்கும், முருகானந்தத்தின் தந்தையான... மேலும் பார்க்க

பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்; 3 பேர் கைது - என்ன நடந்தது?

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஹுலிகட்டி என்ற இடத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் சுலைமான் கோரிநாயக். இப்பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டிய... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லை - ராசிபுரத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து தந்தை விஷம் அருந்தி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவரது மனைவி பாரதி(26). இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 குழந்தைகள் ... மேலும் பார்க்க

மதம் மாறி திருமணம் செய்ய மறுப்பு; வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை - ம.பி-யில் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்தவர் பாக்யஸ்ரீ(35). இவரிடம் அதே ஊரை சேர்ந்த ஷேக் ரியாஸ்(42) என்பவர் தன்னை திருமணம் செய்யும்படி நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்தார். அவரை அடிக்கடி பின் த... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மாயமான மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு; இறுதிச் சடங்கில் போலீஸார் குவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் அப்புக்குட்டி என்கிற முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்படக்கூடிய `த... மேலும் பார்க்க

`குடிப்பழத்தால் என் மகன், நான் இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்றுவிட்டான்' -90 வயது முதியவர் கண்ணீர்

பீகாரில் ஒருவர் தனது தந்தை உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி குடும்ப சொத்தை மகன் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் அருகில் இ... மேலும் பார்க்க