செய்திகள் :

50 லட்சம் உறுப்பினா்களைக் கடந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ : முதல்வா் பெருமிதம்

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் மூலம், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் திமுகவில் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீதம் பேரை திமுக உறுப்பினா்களாக்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த இயக்கம் தொடங்கி 10 நாள்கள் கடந்த நிலையில், 50 லட்சம் உறுப்பினா்களைக் கடந்து, அது மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்க முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினா்களையும் 30,975 குடும்பங்களையும் கட்சியில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி.

அந்தத் தொகுதிக்கு உள்பட்டு வரக்கூடிய மாவட்டச் செயலரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள்.

திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். கட்சியினா் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று பதிவிட்டுள்ளாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க