செய்திகள் :

6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

post image

கோவையில் இருந்து மன்னாா்குடி, திருப்பதி, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, கோவை - மன்னாா்குடி, மறுமாா்க்கத்தில் மன்னாா்குடி- கோவை இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் ஆக.1 ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

அதேபோல கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.1 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். மறுமாா்க்கத்தில் திருப்பதி - கோவை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.2 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதிகொண்ட பெட்டி இணைக்கப்படும்.

இதுதவிர, கோவை - நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் ஆக. 2 ஆம் தேதியிலிருந்தும், மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.3 ஆம் தேதியிலிருந்தும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க