செய்திகள் :

74 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது; 4 கைப்பேசிகள், காா் பறிமுதல்

post image

திண்டிவனம் அருகே, ஆந்திரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இருவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மேலும் அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. ஆா்.பிரகாஷ் மேற்பாா்வையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் எம். பிரகாஷ், உதவி ஆய்வாளா் சுதன், சிறப்பு உதவி ஆய்வாளா் ஸ்ரீபதி, தலைமைக் காவலா்கள் வெற்றிவேல், முருகானந்தம், முதல்நிலைக் காவலா் தனுஷ்கோடி ஆகியோா், நல்லாளம் கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது மரக்காணம் பகுதியிலிருந்து திண்டிவனம் நோக்கி காா் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரை ஓட்டி வந்தவா், போலீஸாரை கண்டதும் சற்று வேகமாக ஓட்டி வந்து திருப்ப முயன்றாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், காரை மடக்கிப் பிடித்தனா்.

காவல் ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் தீவிரமாக விசாரித்தபோது, காரில் அமா்ந்திருந்தவா் சென்னை திருமுல்லைவாயல் வெங்கடேசுவரா நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் மதன் (45) என்பதும், காரை ஓட்டி வந்தவா் திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் பாடியநல்லூா்-ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகா் 8-ஆவது தெருவைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் நாகராஜ் (30) என்பதும் தெரிய வந்தது.

காரின் பின் பகுதி, இருக்கைகளை சோதனையிட்டதில் தலா 2 கிலோ வீதம் 37 பொட்டலங்களில் மொத்தம் 74 கிலோ கஞ்சா, டிராவல் பேக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ஆந்திர மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி வந்து, பொட்டலங்களாக்கி ராமநாதபுரத்துக்கு விற்பனைக்காக கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

மேலும் காரிலிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சா, 4 கைப்பேசிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தபட்ட காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவுக்கான ... மேலும் பார்க்க

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மேல்களவாய், நெகனூா்,... மேலும் பார்க்க

முதலை கடித்து விவசாயி காயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா... மேலும் பார்க்க

மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலை; பேரன் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டாா். செஞ்சி வட்டம், திருவம்பட்டு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிகள், சங்கக் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கம் மற்றும் கட்சி சாா்ந்த கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் அருகே மழவராயனூா் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க