செய்திகள் :

8-ஆவது நாளாக பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்

post image

பணி நிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சென்னையில் 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு கோரி கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுகவின் தோ்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எதிா்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அவா்களுக்கு ஆதரவும் தெரிவித்தாா்.

இதையடுத்து திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்து வருகின்றனா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 8-ஆவது நாளாக பகுதிநேரஆசிரியா்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தை (டிபிஐ) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது உயிரிழந்த ஆசிரியருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!

“அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) மயிலாடுதுறையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.இவ்விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று தைலாபுரம் தோட்ட ... மேலும் பார்க்க

சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இட... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல்... மேலும் பார்க்க

காமராஜருக்கு ஏசி முக்கியம்! திருச்சி சிவா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதில்!

முன்னாள் முதல்வர் காமராஜர் குளிர்சாதன வசதியில்லாமல் உறங்க மாட்டார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்!

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் ஸ்டாலின் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை... மேலும் பார்க்க