செய்திகள் :

8 நாள்களில் 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்: புறப்பட்டார் பிரதமர் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி, 8 நாள்கள் சுற்றுப்பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியில் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாள்களில் அவர் மேற்கொள்வுள்ள சுற்றுப்பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. இந்த 8 நாள்கள் கொண்ட சுற்றுப்பயணம் ஆப்பிரிக்க நாடான கானாவில் இன்று (ஜூலை 2) தொடங்குகிறது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மோடியின் முதல் பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.

கானா தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற கானா அதிபர் ஜான் டிராமணி மஹாமாவை மோடி சந்திக்கவுள்ளார். பின்னர் ஜூலை 3 ஆம் தேதி டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்குச் செல்வார். டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் மோடி ஆர்ஜென்டீனாவுக்குச் செல்கிறார். அதிபர் ஜேவியர் மிலேயின் அழைப்பின் பேரில் மோடி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமரின் முதல்பயணம் இதுவாகும்.

உணவு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், மருத்துவம், சுரங்கம், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் மோடியும் மிலேயும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள்.

ஜூலை 6 ஆம் தேதி பிரேசிலுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இது மோடியின் நான்காவது பிரேசில் பயணமாகும்.

ஜூலை 9 ஆம் தேதி நமீபியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நமீபிய அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்திக்கிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் நமீபியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், ஒரு இந்தியப் பிரதமர் அந்த நாட்டிற்கு வருகை தருவது 3-வது முறையாகும்.

Prime Minister Narendra Modi has left today for his visit to Ghana, Trinidad and Tobago, Argentina, Brazil, and Namibia. Mr Modi will arrive in Ghana today on a two-day visit.

இதையும் படிக்க... இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு

பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்க... மேலும் பார்க்க

ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் ட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க