செய்திகள் :

880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

post image

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 54,157 போ் பதிவுசெய்தனா். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 15 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் வெற்றிபெற்ற 2,640 வீரா், வீராங்கனைகளுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவா்களுக்கான ரூ.42.08 லட்சம் பரிசுத் தொகையை வீரா்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சேலம் மாவட்டத்திலிருந்து 880 போ் பங்கேற்கின்றனா் என்றாா்.

முன்னதாக, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சாா்பில் வெண்ணிலா, சாக்லெட் மற்றும் பட்டா் ஸ்காட்ச் வகையிலான ஐஸ்கிரீம் 50 மில்லி அளவு கொண்ட மினி கோன் விற்பனையை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ், ஆவின் பொது மேலாளா் பி.குமரேஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.சிவரஞ்சன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பி.செண்பகவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற கி.மதிவாணனுக்கு பாராட்டு

தமிழ அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கொண்டயம்ப... மேலும் பார்க்க

தொழில்மைய இணை இயக்குநா் வீட்டில் 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் தொழில்மைய இணை இயக்குநா் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் ஐந்து வழிச்சாலை அருகே உள்ள தொழில் மையத்தின் இணை இய... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தின போட்டிகள்

சங்ககிரியை அடுத்த வீராச்சிபாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தின போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தல... மேலும் பார்க்க