செய்திகள் :

Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என்ன?

post image

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31), ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதி ஆகும்.

இந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் உள்ளூர் நேரப்படி, இரவு 11:47 மணிக்கு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

நேற்று, ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் சபிபுல்லா முஜாஹித் கூறும்போது, “ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ தாண்டியுள்ளது. மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குனார் மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை மட்டுமே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன், இன்னும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்?

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் பொறுப்பாளர் இந்த்ரிகா ரத்வட்டே, AP செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

“களிமண் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து, வீட்டிற்குள் இருந்தவர்களின் மீது விழுந்துள்ளது. அதுவே அதிக உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணமாக உள்ளது.

அந்தப் பகுதியில் மக்கள் தொகை மிக குறைவே. ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், உயிரிழப்புகள் அதிகமாகி உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rain Alert: "செப்டம்பரில் இங்கெல்லாம் அதிக மழை பெய்யும்" - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?

தெற்கில் மழை, மேற்கில் வெள்ளம் என்று ஏற்கெனவே இந்தியாவில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது.இந்த செப்டம்பர் மாதம் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது."20... மேலும் பார்க்க

Rain Alert: 'சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும்'- அப்டேட் தந்த வானிலை ஆய்வு மையம்!

கடந்த இரண்டு நாள்களாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, வால்பாறை, மாஞ்சோலை (திருநெல்வேலி), கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பத்தூர், தேனி, நீலகி... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவருக்குத் திருமணம் முடிந்து பவித்ரா (40) என்ற மனைவியும், சௌஜைன்யா (7) மற்றும் சௌமையா (4) என இரு மகள்கள் இருக்கின்றனர். ராஜேஷ் குமார் சத்தீஸ்கர் மாநிலத்த... மேலும் பார்க்க

TN Rains: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் அறிக்கை

நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மழை பெய்தது. ஆனால், காலை 10 மணிக்கு முன்பே, வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்த... மேலும் பார்க்க

சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது. கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடிய... மேலும் பார்க்க

மும்பை கனமழை: முடங்கிய புறநகர் ரயில் சேவை; அமிதாப்பச்சன் பங்களாவில் புகுந்த மழை வெள்ளம்

மும்பையில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் மையப் பகுதியில் ஓடும் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. மித்தி ஆற்றில் ஏற்கனவே த... மேலும் பார்க்க