செய்திகள் :

Agaram: "ரசிகர் மன்றம் அரசியலுக்கு போறவங்களுக்கு; நீ ஏன் அதைப் பண்ணுறன்னு அவர் கேட்டார்" - கமல்ஹாசன்

post image

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், நடிகர் மற்றும் எம்.பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், "அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

Agaram விதை 15-ம் ஆண்டு விழா
Agaram விதை 15-ம் ஆண்டு விழா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், "கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேடையில் பேசிய கமல்ஹாசன், "ரசிகர் மன்றத்தை நான் நற்பணி இயக்கமாக மாற்றியது, இவர் (சூர்யா) செய்தது எல்லாம் ஒன்றுதான்.

நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் இவர் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் ஒரு முன்னாடி இருக்கிறார்.

இந்த ரசிகர் மன்றம் எல்லாம் வேண்டாம் என்று எனக்கு சொன்னவர் சிவகுமார் அண்ணன்தான்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`பெரியவர்கள் எல்லாம் அரசியல் செல்வதற்காக அதை ஆரம்பித்தார்கள். நீ ஏன் அதை செய்து கொண்டிருக்கிறாய்' என்றார். நானும் `சரி' என்று சொல்லிவிட்டேன்.

ஆனால், பாலச்சந்தர் சார் செய்த தப்பு, எனக்கு கொஞ்சம் நட்சத்திர அந்தஸ்து வந்து விட்டது.

சிவக்குமார்
சிவக்குமார்

நிறைய பேர் வந்தார்கள் வேண்டாம், என்றாலும் நிறுத்த மறுத்தார்கள்.

அப்புறம் அண்ணன்கிட்ட சாரி சொல்லிவிட்டு அதை நற்பணி இயக்கமாக மாற்றப் போகிறேன் என்று ஆரம்பித்தது தான் அது.

அதற்காக அவர் என்னைப் பாராட்டியிருக்கிறார்.

சூர்யா அற்புதமான கவிதை. விதை அவர் (சிவக்குமார்). அவரிடம் கேட்டால் அவர் பல பேரைச் சொல்லுவார்." என்று கூறினார்.

`நமக்கே சில படங்கள் ஓடாதென தெரியும்போது, அதை செய்தால் தவறாகிடும்..!' - அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகி... மேலும் பார்க்க

Anirudh: " பாடலுக்காக சாட் ஜி.பி.டி-யின் உதவியை நாடினேன்!" - அனிருத் ஓப்பன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகி... மேலும் பார்க்க

Coolie: `கூலி டைம் டிராவல் படமா?’ - லோகேஷ் கனகராஜ் கொடுத்த சப்ரைஸ் பதில் என்ன?

'கூலி' படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் ப்ரோமோஷன் பணிகளிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். பேட்டிகள், இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு என லோகேஷ... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்!" - எஸ்.கே கலகல!

சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி ரிலீஸாகிறது. இதனைத் தாண்டி, தற்போது 'பராசக்தி' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டின் நாஸ்காம் கூட்ட... மேலும் பார்க்க

Ajith: `கரியர் மட்டும் இல்லாம பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கீங்க'- அஜித் குறித்து நெகிழும் ஷாலினி

அஜித் திரைத்துறையில் 33 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவரின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இது குறித்து சில தினங்க... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "என்னோட இந்தப் படத்தை பார்ட் 2 எடுக்கலாம்; ஆனால்" - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என இரண்டு படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்நிலையில் 'Nasscom' என்ற சேனலுக்கு நேர்காணல் கொடுத்திருக... மேலும் பார்க்க