செய்திகள் :

Apollo: ‘எண்டு-ஓ செக்’-ஐ அறிமுகம் செய்த அப்போலோ!

post image

பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் (ACC)மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) எண்டு-ஓ செக் (End-O Check) என்ற ஒரு செயல்திட்டத்தை நேற்று தொடங்கியிருக்கிறது. 

பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான விரிவான செயல்திட்டம் இது. கருப்பையக வரிச்சவ்வு மற்றும் சினைப்பை ஆகியவற்றில் வரக்கூடிய மிகப்பொதுவான பெண் பிறப்புறுப்பு சார்ந்த இரு புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே மற்றும் பலனளிக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய காலகட்டத்திலேயே கண்டறிவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கமாகும்.  

எண்டு-ஓ செக் என்ற பெயரிலான இச்செயல்திட்ட தொடக்கவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, சினைப்பை மற்றும் கருப்பையக வரிச்சவ்வு புற்றுநோய்கள் மீது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக மருத்துவ நிபுணர்களின் விவாத அமர்வை அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் ஒருங்கிணைந்து நடத்தின. 

பெண்களுக்கு மேற்குறிப்பிட்ட புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் மீது இந்த விவாத அமர்வு சிறப்பு கவனம் செலுத்தியது. அத்துடன், உரிய நேரத்தில் சிகிச்சைப் பெறுவதைத் தாமதப்படுத்துகின்ற தவறான கண்ணோட்டங்களையும், நம்பிக்கைகளையும் பெண்கள் மனதிலிருந்து அகற்றுவதும் இந்த அமர்வின் குறிக்கோளாக இருந்தது. 

ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜித் பை, ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். வெங்கட் P மற்றும் APCC – ன் பெண் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணர் டாக்டர். குமார் கப்பாலா, ACC – வானகரத்தின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மது பிரியா, ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் நிபுணர் டாக்டர் பிரியா கபூர், ஆகியோர் நிபுணர்களது விவாத அமர்வில் பங்கேற்று கலந்துரையாடினர். 

ACC – தேனாம்பேட்டையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஐயப்பன் இந்நிகழ்வின் நெறியாளராகச் செயல்பட்டார். 

“சத்தமில்லாமல் கொல்லும்” நோய் எனப் பெரும்பாலும் அழைக்கப்படும் சினைப்பை புற்றுநோயானது, 55 மற்றும் 64 ஆண்டுகள் வயதுக்கு இடைப்பட்ட பெண்களைப் பாதிக்கிறது. இந்நோய் பாதிப்பு கண்டறியப்படும் சராசரி வயது 63 ஆக இருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், சிகிச்சைக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு உயிர்வாழும் விகிதம் 90% - க்கும் அதிகமாக இருக்கிறது.  

இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 1.57 மில்லியனாக அதிகரிக்கும் என முன்கணிக்கப்பட்டிருக்கிறது. பெண்களைப் பாதிக்கும் முதன்மையான ஐந்து புற்றுநோய்கள் பட்டியலில் சினைப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. வயது – நிலையான பாதிப்பு நேர்வு விகிதங்கள், சினைப்பை புற்றுநோய்க்கு ஒவ்வொரு 100,000 நபர்களில் 4.6 மற்றும் கருப்பையக புற்றுநோய்க்கு ஒவ்வொரு 100,000 நபர்களில் 2.5 என மதிப்பிடப்பட்டிருக்கின்றன. 

இதற்குப் பங்களிப்பு செய்யும் காரணிகளுள் இனப்பெருக்க பாங்குகளில் மாற்றங்கள், நகர்ப்புற வாழ்க்கை முறைகள் மற்றும் வளர்சிதை மாற்ற பாதிப்புகளில் அதிகரிப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. அதிக இடர்வாய்ப்புள்ள மக்கள் பிரிவினரில், இலக்குடன் நோயறிதலை மேற்கொள்ள அவசரத்தேவை இருப்பதை இது முன்னிலைப்படுத்துகிறது.  

கருப்பையக உள்வரிச்சவ்வு புற்றுநோயானது, எதிர்பாராத இரத்தப்போக்கு அல்லது இயல்புக்கு மாறான திரவ வெளியேற்றம் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகின்றபோது, ஆரம்ப நிலையிலேயே இந்த அறிகுறிகள் குறித்து மருத்துவரிடம் தகவலளிக்க பல பெண்கள் தவறிவிடுகின்றனர்.  இதனால், தாமதிக்கப்பட்ட நோயறிதல்களும் மற்றும் சிகிச்சையின் விளைவுகள் சரியாக பயனளிக்காத நிலையும் ஏற்படுகின்றன. 

அதிக இடர்வாய்ப்புள்ள மக்கள் பிரிவினரில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிதல், அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உரிய நேரத்திற்குள் இடையீட்டு சிகிச்சை மீது சிறப்பு கவனம் செலுத்தும் விதத்தில் எண்டு-ஓ செக் செயல்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  தங்களது பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு தன்முனைப்பு நடவடிக்கைகளை பெண்கள் எடுப்பதற்கு இது ஆதரவளிக்கிறது.  

இத்திட்டத்தின் தொடக்கவிழாவில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் பிரசிடென்ட் திரு. தினேஷ் மாதவன் கூறியதாவது: “புற்றுநோய் சிகிச்சையில் உயிர்பிழைப்பு விகிதத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதையும் எமது அதிக சக்தி வாய்ந்த தோழனாக ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது இருந்து வருகிறது.  எண்டு – ஓ செக் என்பது, நோயாளிகள் தன்முனைப்புடன் எடுக்கும் ஒரு நடவடிக்கை மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சையிலிருந்து அதை கண்டறிவதற்கான அடிப்படை சோதனை மீதும் ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது மீதும் சிறப்பு கவனத்தை மாற்றும் நடவடிக்கையாக இது இருக்கும். புற்றுநோய் சிகிச்சை மேலாண்மை குழுக்களால் உரிய நேரத்திற்குள் நோய் பாதிப்பை கண்டறிந்து, துல்லிய சிகிச்சை வழங்கப்படுவதை இது எளிதாக்கும்.” 

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்  & அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சென்னையின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி பேசுகையில், “எண்டு – ஓ செக் செயல்திட்டத்தின் மூலம் முன்தடுப்பு புற்றுநோயியல் மீதான எமது பொறுப்புறுதியை நாங்கள் மேலும் வலுவாக்குகிறோம்.  மருத்துவ நெறிமுறைகள் என்பவற்றையும் கடந்ததாக இச்செயல்திட்டம் அமல்படுத்தப்படுகிறது;. விழிப்புணர்வை உருவாக்குவது, தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமையளிக்க பெண்களை ஊக்குவிப்பது, விரிவான ஸ்க்ரீனிங் செயல்முறைக்கு அணுகுவசதி கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை தொடர்பானதாக இத்திட்டம் இருக்கும்.  ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது, உயிர்களை காப்பாற்ற உதவுவதோடு, அதிகம் பயனளிக்கின்ற மற்றும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சைகளை நாங்கள் வழங்கி குணப்படுத்த எங்களை அனுமதிக்கிறது.” என்று கூறினார். 

#புற்றுநோயை வெல்வோம்

அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/

புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. 

இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 400-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.  

இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்

உங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் உடலில் வைட்டமின் டி மிக மிக அவசியம். அதனால்தான், அந்தக் காலத்தில் 'சூரிய ஒளி புகாத வீட்டுக்குள் வைத்தியர் அடிக்கடி புகுவார்' என்பார்கள். அதாவது, சூரிய ஒளி... மேலும் பார்க்க

CRIB: இந்தியாவில் புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு! - விவரம் என்ன?

இதுவரை உலகம் முழுக்க 47 வகை ரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்ல் லான்ஸ்டீனர... மேலும் பார்க்க

உதகை: அரசு மருத்துவமனையில் பேட்டரி சேவை அறிமுகம்!

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில், கல்லூரியின் நிதியில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனம், நுழைவாயிலிலிருந்து ஓ.பி பிளாக் வரை செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவை, நிர்வாகம் சார்பில... மேலும் பார்க்க

சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையில் மைல்கல்லை எட்டிய அருணா கார்டியாக் கேர்

திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: என்மகனுக்கு 22 வயதாகிறது. அவனுக்குபைக் ஓட்டுவதில் அலாதி ஆர்வம். ஃபேன்சி பைக் வைத்திருக்கிறான். வார இறுதி நாள்களில் நண்பர்களோடுசேர்ந்து நீண்ட தூரம் பைக் ரைடு செல்கிறான். அப்படிச்செல்வது... மேலும் பார்க்க

புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் - ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோயை எதிர்க்கும் உலகளாவிய தடுப்பூசி உருவாக்குவதில் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்த ஆய்வு, எலிகளில் நடத்தப்பட்டதாக நேச்சர் பயோமெ... மேலும் பார்க்க