செய்திகள் :

Army: ``அதிவிரைவு தொழில்நுட்பத்திற்கு அக்னி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்'' - தலைமை தளபதி அறிவுரை

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்ட்டர் எனப்படும் இந்த ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் இயங்கி வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முப்படை அதிகாரிகள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

ராணுவ

இரண்டு நாள் பயணமாக வெலிங்டன் ராணுவ மையத்திற்கு வருகை தந்திருந்த இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி, முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் அதிநவீன ராணுவ செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டிருக்கிறார். மேலும், ராணுவ பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமை தளபதி, அவர்களிடம் உரை நிகழ்த்தியிருக்கிறார்.

ராணுவ பயிற்சி மையத்தில் பேசிய தலைமை தளபதி உபேந்திரா திவேதி, "உலகில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராணுவத்திலும் அதிவேகமான தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

ராணுவ தலைமை தளபதி

அதிநவீன தொழில்நுட்பங்களை கையாள இந்த தலைமுறை ராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும். இந்த அதிவிரைவு ராணுவ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தி அக்னி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் " என அறிவுரை வழங்கியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?

இதோ அப்படி, இப்படி என்று கோடைக்காலம் வந்தே விட்டது. `ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இந்தக் காட்டு காட்டுகிறதே... அக்னி நட்சத்திரம் வந்தால் இன்னும் நாம் என்ன பாடுபடப் போகிறோமோ’ என்ற புலம்பல்களும் அதிகரித்து... மேலும் பார்க்க

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க