செய்திகள் :

Azhapula: "வீர சகாவே... வீர சகாவே" - வி.எஸ்., இறுதிச்சடங்கில் முழக்கமிட்ட 1-ம் வகுப்பு மாணவி!

post image

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் கடந்த திங்கட்கிழமை காலமானார்.

சிபிஎம்-ன் நிறுவனத் தலைவரான வி.எஸ்., உடல் புதன்கிழமை ஆலப்புழாவில் உள்ள வலியாச்சுடுகாட்டில் உள்ள தியாகிகள் தூணில் முழு அரசு மரியாதையுடன், முழு துப்பாக்கி வணக்கம் உட்பட தகனம் செய்யப்பட்டது.

வி.எஸ்.,

அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்து கனமழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர். தலைநகரிலிருந்து சுடுகாடு வரை 'கண்ணே கரலே வியாசே' என்ற முழக்கம் நிறைந்திருந்தது.

அந்த வகையில், பரவூர் என்ற பகுதியில் உள்ள வி.எஸ் அச்சுதானந்தன் வீட்டில் ஆயிரா பி ஹமீது என்ற 1ம் வகுப்பு படிக்கும் மாணவி முழக்கங்களை எழுப்பி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார்.

பத்தினம்திட்டாவில் உள்ள புரமாட்டம் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் இந்த மழலையின் வீடியோ வைரலாகி வருகிறது. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ:

வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு நாடு முழுவதிலுமிருந்து தலைவர்கள் அஞ்சலி செய்தி வெளியிட்டனர். இறுதிச்சடங்கில் முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கோஷங்களை எழுப்பினர்.

வி.எஸ்.அச்சுதானந்தன் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தொழிற்சங்க ஈடுபாடுகள் மூலம் அரசியலில் நுழைந்த அவரது வாழ்க்கையில் புன்னப்ரா-வயலார் போராட்டம் (1946) முக்கிய திருப்பமாக அமைந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யில் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், மத்தியக் குழு உறுப்பினராகவும், பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளாவின் முதலமைச்சராக பதவிவகித்தார்.

வி.எஸ்., மக்களோடு மக்களில் ஒருவராக இருக்கும் எளிமையான வாழ்க்கை முறைக்காக போற்றப்பட்டு, கம்யூனிஸ தொண்டர்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்.

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க

``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வக... மேலும் பார்க்க