செய்திகள் :

Bihar Election: "RJD, காங்கிரஸ் மேடையில் என் தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்" - பிரதமர் மோடி

post image

பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து நடத்திய பேரணியில் தன்னையும் தனது தாயையும் குறித்து ஆபாசமான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்தக் கோஷங்கள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கிறது எனவும் மறைந்த தாய் குறித்து அரசியல் மேடையில் இதுபோன்று அவதூறு பேசப்படும் எனக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை எனவும் பேசியுள்ள பிரதமர் மோடி.

தனது தாயுடன் மோடி
தனது தாயுடன் மோடி

"அம்மாதான் நமக்கு உலகம். நமது சுய மரியாதை. இந்தப் பாரம்பர்யமிக்க பீகாரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்ததை என்னால் கற்பனைகூடச் செய்து பார்த்தது இல்லை. ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மேடையில் என் தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்.

இது என் தாயை மட்டும் அவமதிக்கவில்லை. நாட்டில் உள்ள அத்தனை அம்மாக்கள், மகள்கள், சகோதரிகளையும் அவமதிக்கிறது. இதைப் பார்த்தும் கேட்டும் பீகாரின் ஒவ்வொரு தாயும் எவ்வளவு வருந்தியிருப்பீர்கள் என எனக்குத் தெரியும். என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ, அதே அளவு வலியை பீகார் மக்களும் அனுபவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" எனப் பேசினார் மோடி.

Vote Adhikar Yatra
Vote Adhikar Yatra

மேலும், "என் தாய்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பின்னர் எதற்காக அவர் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மேடையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்?" எனக் கேள்வியும் எழுப்பினார்.

அத்துடன் பெண்களைப் பலவீனமானவர்களாகக் கருதும் அவர்களின் (காங்கிரஸ், ஆர்.ஜே.டி) மனப்பாங்கையும் வெளிப்படுத்துவதாகப் பேசினார்.

சுய உதவிக்குழுக்களுடன் தொடர்புடைய கிராமப்புறப் பெண்களிடையே இருந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஒரு புதிய கூட்டுறவு முயற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் மோடி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின... மேலும் பார்க்க

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?* வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!* ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?* மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...... மேலும் பார்க்க

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" - பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை ... மேலும் பார்க்க

'லேப்டாப் எங்க... தாலிக்கு தங்கம் எங்க..?' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மேலூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியா கூட்டணியையு... மேலும் பார்க்க