செய்திகள் :

Chenab Bridge: "தேவையில்லாமல் என்னை பிரபலமாக்காதீர்கள்" - முக்கிய இன்ஜினீயர் மாதவி லதா பதிவு!

post image

ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தைக் கடந்த வெள்ளி அன்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் பேராசிரியர் ஜி மாதவி லதாவை நாடே கொண்டாடும் சூழலில், தன்னை தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.

முனைவர் லதா செனாப் பாலத்தை கட்டிய ஆஃப்கான்ஸ் நிறுவனத்தின் புவி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அவர், கவனிக்கப்படாத ஆயிரக்கணக்கான ஹீரோக்களை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

செனாப் ரயில் பாலம்

"சரிவான பகுதிகளில் நிலைத்தன்மையை உருவாக்குவதும், சாய்வான இடங்களில் அடித்தளம் அமைக்கவும் உதவுவதே எனது பணியாக இருந்தது" என லின்க்ட் இன் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட செனாப் ரயில் பாலத் திட்டத்தில் 17 ஆண்டுகளாக பங்களித்து வருகிறார் மாதவி லதா. அவர் குறித்து "செனாப் திட்டத்துக்குப் பின்னிருந்த பெண்", "பாலம் கட்ட நடந்த அற்புதங்கள்" போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகளை ஆதாரமற்றவை என விமர்சித்துள்ளார்.

"என்னைத் தேவையில்லாமல் பிரபலப்படுத்தாதீர்கள்... செனாப் பாலத்துக்காக பாராட்டப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒரு ஆள்" எனக் கூறியுள்ளார்.

மாதவி லதா
மாதவி லதா

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில்(IISc) பேராசிரியராக இருக்கும் மாதவி லதா அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "பல தந்தைகள் அவர்களது மகள்கள் என்னைப் போல ஆக வேண்டும் எனக் கூறியுள்ளனர், பல இளம் மாணவர்களும் சிவில் இஞ்சினியரிங் இப்போது படிக்க விரும்புவதாக மெஸ்ஸேஜ் செய்கின்றனர்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

பலரும் சாத்தியமற்றது எனக் கருதிய பணியை செய்து முடித்ததற்காக இந்திய ரயில்வே மற்றும் ஆஃப்கான்ஸ் நிறுவனத்தை வாழ்த்தினார். "எல்லா புகழும் இந்திய ரயில்வேக்கே" எனத் தெரிவித்துள்ளார்.

செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது. இந்திய ரயில்வே இதை ரூ.1,486 கோடி செலவில் கட்டியுள்ளது, இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த பாலத்துக்கான அடித்தளத்தை அமைப்பதில் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. முந்தைய அறிக்கைகளில் கவனிக்கப்படாத உடைந்த பாறைகள் மற்றும் மறைக்கப்பட்ட துவாரங்களைக் கருத்தில்கொண்டு சாய்வில் நிலைத்தன்மையை வழங்கும் வடிவமைப்பை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார் மாதவி லதா.

செனாப் ரயில் பாலத்துக்கான ஆய்வுகள் பற்றிய இவரது அறிக்கை,  'Design as You Go: The Case Study of Chenab Railway Bridge' என்ற பெயரில் இந்திய புவி தொழில்நுட்ப இதழின் சிறப்பு பெண்கள் பதிப்பில் வெளியாகியுள்ளது.

``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடத்தில் தனது அறையில் ஏர்கண்டி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; "விசா விதிமுறை மீறில்" - அதிகாரிகள் சொல்வது என்ன?

கபே லேம் கைதுஉலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இ... மேலும் பார்க்க

`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன காரணம்?

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடத்தப்பட்டது. மணமகன் ஊர்மக்கள் படைசூழ திருமண ஊர்வலத்துடன் மணமகள் வீட்டுக்கு வந்திருக்கிறார்... மேலும் பார்க்க

கேரளா: "4 ஆம் வகுப்பு படிக்கிறப்ப அடிச்சான்" - 50 ஆண்டுகளாகத் தீராத வகுப்புத் தோழர்களின் சண்டை!

வகுப்புத் தோழர்கள்கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.ஜே. பாபு (62). இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாலோமின் நாடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் 4 வகுப்பு படித்த... மேலும் பார்க்க

திருமண சீர்... நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா! எந்தவகைப் பூனை தெரியுமா? - ஆச்சர்ய தகவல் இதோ!

சீனாவில் ஒரு குடும்பம் தன் மகளுக்கு திருமண சீர் என 100 சிவெட் பூனைகளை வழங்கியிருப்பது சர்வதேச வினோதங்களாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டி... மேலும் பார்க்க

9 மாதங்களில் 3 முறை லாட்டரி வென்ற 'ரியல் லக்கி பாஸ்கர்' - ரூ.21 கோடியை என்ன செய்யப் போகிறார்?

லாட்டரி சட்டப்பூர்வமாக உள்ள இடங்களில் வழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மிகப் பெரிய தொகையைப் பரிசாகத் தரும் லாட்டரிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலே... மேலும் பார்க்க