செய்திகள் :

Delhi: "நெருக்கமான உறவுகளைப் பேசுதல்" -பல்கலைக்கழகத்தின் புதிய பாடம் ஏன் முக்கியமானது?

post image

டெல்லி பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதன்முறையாக "நெருக்கமான உறவுகளைப் பேசுதல்" என்ற தலைப்பில் பாடதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜென் சி தலைமுறையினர் காதல் தோல்விகளை எதிர்கொள்ளுதல், ரெட் ஃப்ளாக்களை அடையாளம் காணுதல், ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதற்கு இந்த பாடம் உதவும் எனக் கூறப்படுகிறது.

ரிலேஷன்ஷிப்

2025-26 கல்வியாண்டில் அனைத்து துறைகளிலும் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்த பாடத்தை தேர்தெடுக்கலாம். பாரம்பரிய கல்விமுறையில் நேரடியாக உரையாடப்படாத காதல், நட்பு, பொறாமை மற்றும் பிரிவு உள்ளிட்ட உறவுச் சிக்கல்களைக் கையாள இளம் தலைமுறையினருக்கு உதவும் வகையில் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை முன்னெடுப்பில் இந்த வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற, உளவியலில் அடிப்படை புரிதல் கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நச்சுத்தனமான உறவுகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இளம் வயதினரிடையே அதிகரிக்கும் வன்முறை பற்றிய கவலைகளே இந்த படிப்பினை அறிமுகப்படுத்தக் காரணம் என்கின்றனர்.

Young Adults
Young Adults

இந்த பாடத்தை,

1. நட்பு மற்றும் நெருக்கமான உறவுகளின் உளவியல்

2. காதலைப் புரிந்துகொள்ளுதல்

3. உறவுகள் மோசமடைவதற்கான அறிகுறிகள்

4. செழித்து வளரும் ஆரோக்கியமான உறவுகள் என நான்கு அலகுகளாகப் பிரித்துள்ளனர்.

கடந்த மே இறுதியிலிருந்து ஜூன் தொடக்கத்தில் மட்டும் டெல்லியில் 3 குழப்பமான கொலைகள் நடந்துள்ளன. மூன்றும் நச்சுத்தன்மையான நெருக்கமான உறவுகளால் ஏற்பட்டவை.

கோமல் என்ற 21 வயது பெண், கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார், விஜயலக்‌ஷ்மி என்ற 19 வயது பெண் அவரது 20 வயது காதலரால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார், மெஹெக் ஜெயின் என்ற 18 வயது பெண் அவரது காதலரால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.

இந்த கொலைகள் நேரடியாக பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்புடையவையல்ல என்றாலும், இளைஞர்களிடையே உணர்ச்சி ரீதியான உறுதியற்ற தன்மை, உடைமை மனப்பான்மை மற்றும் கட்டுப்படுத்த முடியாத பொறாமை  ஆகிய குணங்கள் ஆபத்தான முறையில் அதிகரித்திருப்பதுதான் காரணம் என்பதால் இந்த வகுப்புகள் முக்கியமானவை என்கின்றனர்.

Vedan: "பூமி நான் வாழும் இடம்.." - பல்கலைக் கழக பாடத்தில் சேர்க்கப்பட்ட வேடன் பாடல் எதைப் பேசுகிறது?

2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர... மேலும் பார்க்க

`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' - அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதிபதி!

'தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும்' என்று நம்மில் பலரும் தவறான கற்பிதத்தை மனதில் கொண்டு, கடனை வாங்கியாவது பிள்ளைகளை தன... மேலும் பார்க்க

JEE: முதன்முறையாக ஐஐடியில் படிக்கத் தகுதிபெற்ற பழங்குடி மாணவி; இந்தியளவில் சாதனை படைத்த கதை!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது தந்தை ஆண்டி.கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாய் கவிதா கூலித்தொழில் செய்து வருகிறார... மேலும் பார்க்க

ஐஐடி தகுதித் தேர்வில் கல்வராயன் மலை பழங்குடி மாணவி சாதனை - முழு கல்விச் செலவையும் ஏற்கும் தமிழக அரசு

கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஐஐடி தகுதித் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்ட் 2025 (JEE Advance 2025) தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 417-வது இடம்பிடித்து சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

`அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால், சொத்து வரி ரத்து' - மகாராஷ்டிரா கிராமத்தில் புது திட்டம்

கிராமங்களுக்கு வருவாய் கொடுப்பதில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த சொத்து வரியை வசூலிக்க பஞ்சாயத்து ஊழியர்கள் போராடுவதுண்டு. அதே போன்று கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை படி... மேலும் பார்க்க