செய்திகள் :

Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்பவம்!

post image

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகளை அணிக்காக வென்று கொடுதித்திருக்கிறார். தோனியின் அடையாளமே அவர் களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து தனது திட்டத்தை நகர்த்துவார் என்பது தான். இதனால் ரசிகர்கள் தோனியை கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நீங்கள் எப்போதாவது களத்தில் உங்களுடைய நிதானத்தை இழந்து இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

Dhoni

வெற்றி முக்கியம்

அதற்கு பதில் அளித்த தோனி, " நிறைய முறை இழந்து இருக்கிறேன். ஒருமுறை ஐபிஎல் போட்டியின்போது திடீரென்று கோபமடைந்து களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு என நினைக்கின்றேன். பல சமயங்களில் நமக்கு நிச்சயமாக கோபம் வரும். ஏனென்றால் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடுகிறோம். அப்போது வெற்றி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருக்கும். இதற்காக நாம் பல விஷயங்களை நிர்வகிக்க வேண்டும். ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும். அந்த சமயத்தில் உங்கள் வாயை நீங்கள் மூடி கொள்வது நல்லது. கொஞ்ச நேரம் அதை விட்டு விலகி விடுங்கள். இவ்வாறு செய்தால் உங்களால் நெருக்கடியை சமாளிக்க முடியும்" என்று பதிலளித்திருக்கிறார்.

தோனி

தோனி குறிப்பிட்ட அந்த போட்டி 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போது பென் ஸ்டோக்ஸ் வீசிய நோ பாலை இரண்டாவது நடுவர் திரும்ப பெற்றதால் கடுப்பான தோனி களத்திற்கு வந்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தோனிக்கு போட்டியிலிருந்து 50 சதவீதம் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா... வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ் கங்குலி?

'தி காக்கி: தி பெங்கால் சாப்டர்' படத்தின் புரோமோ வீடியோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆச்சரியத்தைப் பகிர்ந்து ... மேலும் பார்க்க

IPL 2025: "தங்கம் சார்..." - ஸ்டெயின், பாண்ட் சொல்லும் சமகால சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?

ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவாரம் கூட முழுமையாக இல்லை. இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைத்து வீரர்களும் தங்கள் ஐ.பி.எல் அணிகளுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன... மேலும் பார்க்க

Pakistan: '804' என்ற எண்ணால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 1.4 மில்லியன் அபராதம்; பின்னணி என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மி... மேலும் பார்க்க

IPL 2025: "தோனி அல்ல; இவருடைய கேப்டன்சியில் விளையாடுவதே என் விருப்பம்" - கனவைப் பகிரும் ஷஷாங்க் சிங்

வெளியூர் சண்ட போதும், இனி உள்ளூர் சண்ட போடுவோம் என சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த கையோடு, வருகின்ற சனிக்கிழமை தொடங்கும் ஐபிஎல் தொடரை வரவேற்கக் காத்திருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். எப்போதும் போல... மேலும் பார்க்க

Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப்பாடு குறித்து கோலி

இந்திய அணி வீரர்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ சமீபத்தில் ஒரு விதியை அமல்படுத்தியிருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அண... மேலும் பார்க்க

WPL : 'தொடர்ச்சியாக மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வி'- மனமுடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மெக் லேனிங்

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கி... மேலும் பார்க்க