செய்திகள் :

Doctor Vikatan: திடீர் நெஞ்சு வலி என்ன காரணம்? | Heart Attack

post image

Doctor Vikatan: தெரிந்த நண்பருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, உயிர் பிரிந்ததாக கூறுகின்றனர். இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஒரு நபர் திடீரென உயிரிழக்க பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஹார்ட் அட்டாக் பாதிப்பும் ஒன்று. உங்கள் நண்பர் விஷயத்தில் அவரது உடல்நலம் எப்படியிருந்தது, எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தன என்ற விவரங்கள் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும்.

அவரது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருந்தது என்பது முதல் கேள்வி. இதயத்தின் பம்ப்பிங் திறன் குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிர் போகும் வாய்ப்புகள் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் வென்ட்ரிகுலர் டக்கிகார்டியா (Ventricular tachycardia) அல்லது வென்டிகுலர் ஃபிப்ரிலேஷன்  (Ventricular fibrillation) எனப்படுகிற மிக மோசமான இதயத்துடிப்பு நிலை. இதயத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். 

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பிறகும்கூட ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  பைபாஸ் கிராஃப்ட்  திடீரென மூடிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. பைபாஸ் கிராஃப்ட் என்பது இதய பைபாஸ் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை.

இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்திற்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் போகும். இதனால்  நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம்.

ஹார்ட் அட்டாக்

இவற்றை சரி செய்ய, அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள வேறு சில ரத்த நாளங்களை எடுத்து அடைபட்ட ரத்த நாளங்களுக்கு பதிலாக பொருத்துவார்கள். இவ்வாறு அடைப்பைத் தவிர்த்து, ரத்த ஓட்டத்தை சீராக்கப் பயன்படும் இந்த ரத்த நாள சிகிச்சைதான்  பைபாஸ் கிராஃப்ட்.  இது திடீரென மூடிக்கொள்ளும் நிலையில், மீண்டும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் பொதுவான கருத்தாகச் சொல்லலாமே தவிர,  உங்கள் நண்பர் விஷயத்தில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பைபாஸ் செய்த ஒரே வாரத்தில் மரணம் நிகழ்ந்திருப்பதால் இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .யார் இந்த நிதி தி... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' -அமைச்சர் ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு - மக்கள் தொகை: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தொகு... மேலும் பார்க்க

`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர் - என்ன ஸ்பெஷல்?

இப்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளைகிறது. உலகின... மேலும் பார்க்க

DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார். எலான் மஸ்க் - ட்ரம்ப்... மேலும் பார்க்க

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021."சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வான... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?

Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம்சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும்கொடுக்கலாமா... மேலும் பார்க்க