செய்திகள் :

ED பயம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்? - நயினார் நாகேந்திரன்

post image

வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே நடைபெறும் இம்மாநாட்டுக்கான பூமி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட ஆர்எஸ்எஸ், பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "ED-க்கு பயப்பட மாட்டேன் என்று துணை முதல்வர் உதயநிதி சொல்கிறார். பிறகு ஏன் அவருடைய நண்பர்களை லண்டனுக்கு சென்று ஒடி ஒழிய வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு ED ரெய்டு எங்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது, அந்தக் கூட்டணியில் இருந்தார்கள். மேலே ED ரெய்டு நடக்கும்போது கீழே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போது சின்ன வயது. அதனால்தான் ED மீது இப்போது வரை பயம், இல்லையென்றால் உதயநிதி தன் நண்பர்களை கூடவே கூட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே? ED பயம் இல்லை என்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்?

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு ழுக்க முழுக்க ஆன்மிக மாநாடு. ஏற்கெனவே இந்து அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு இதுபோன்ற மாநாடு நடத்திருக்கிறார். இது பெதுமக்களுக்கு பயனுள்ள பக்தி மாநாடாக அமையும்.

அண்ணாமலை வேல்யாத்திரை நடத்தினார். என்னுடைய யாத்திரை சட்டமன்றத்தை நோக்கித்தான் இருக்கும். சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை அழைத்துச் செல்வதுதான் என்னுடைய யாத்திரை.

முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு எந்த அடிப்படையில் எதற்காக போனார் என்றும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேசியது பற்றி ஊடகங்கள் அவரிடம் கேட்டால் ED ரெய்டுக்காகத்தான் போனாரா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்." என்றார்.

United Nations: நிதி நெருக்கடி... `கிட்டத்தட்ட 7,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா ஐக்கிய நாடுகள் சபை?'

நிதி நெருக்கடி காரணமாக, $3.7 பில்லியன் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பேரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம். ஐக்கிய நாடுகள் சபையின் நிதியில்... மேலும் பார்க்க

பாமக: "என் அம்மா மேல் துரும்பைக் கூடப் படவிடமாட்டேன்; ஆனால் இப்போது..." - அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே, நேரிடையாகவும், மறைமுகமாகவும் வார்த்தை மோதல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.இத்தகைய சூழலில், சோழிங்... மேலும் பார்க்க

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.இதில் ஒரு கு... மேலும் பார்க்க

PMK: "எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன்" - நிர்வாகிகள் மத்தியின் அன்புமணி உருக்கம்

'அன்புமணி ஆலோசனை...'பனையூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி முடித்திருக்கிறார்.ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகிய மஸ்க்... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பில் விரிசலா; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?' என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது.'ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அ... மேலும் பார்க்க