செய்திகள் :

England: குற்றங்கள் நடப்பதை முன்பே தடுக்க AI; இங்கிலாந்து அரசின் புதிய முன்னெடுப்பு!

post image

குற்றம் நடந்த பிறகு தண்டனை கொடுப்பதை விட, குற்றம் நடக்காமல் தடுப்பதே சிறந்த தீர்வு என்று கூறப்படுவது உண்டு.

இந்த நிலையில், இங்கிலாந்து அரசு தற்போது செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) மூலம் குற்றங்களை முன்னதாகவே கணித்து தடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சம், `குற்ற வரைபடம் (crime map)' என்ற முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எந்த நேரத்தில், எங்கு குற்றம் நடைபெற வாய்ப்புள்ளது என்பதைக் கணிப்பதாகும்.

AI - செயற்கை நுண்ணறிவு
AI - செயற்கை நுண்ணறிவு

இந்த AI அமைப்பு, காவல்துறை, சமூக நலத்துறை தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும்.

குறிப்பாக கத்திக்குத்து சம்பவங்கள், கொள்ளை, வன்முறை தாக்குதல்கள், சமூக விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னதாகவே கணித்து போலீஸாருக்கு எச்சரிக்கை அனுப்புவதே இதன் நோக்கம்.

இத்திட்டத்தின் முதற்கட்ட முதலீடாக சுமார் 4 மில்லியன் பவுண்டுகள் அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டின் அடிப்படையில் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு செயல் மாதிரி தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுமையான செயல்பாட்டை 2030க்குள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

செயற்கை நுண்ணறிவு (AI)
செயற்கை நுண்ணறிவு (AI)

இந்த முயற்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது பழைய குற்றப் பதிவுகளை மட்டும் காட்டும் வரைபடம் அல்ல.

மாறாக, முன்கூட்டியே கணித்து செயல்பட உதவும் என்பதால், காவல்துறைக்கு குற்றங்களைத் தடுக்கும் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இங்கிலாந்தின் இந்தப் புதிய AI குற்ற வரைபடம் திட்டம் காவல்துறை பணியில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Pregnancy Robot: பெண்ணே வேண்டாம்; சீனாவின் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ரோபோட் - 2026-ல் வருகிறதா?

இன்னும் சில ஆண்டுகளில் கர்ப்பமாகக் கூடிய மனித உருவ ரோபோக்களை அறிமுகப்படுத்த உள்ளது சீனா. உடலுறவு மூலம் அல்ல, குழந்தையை சுமக்கக்கூடிய செயற்கையான கருப்பையைக் கொண்டிருப்பதன் மூலம்.சீனாவின் குவாங்சோ நகரில... மேலும் பார்க்க

Hike செயலி ஏன் தோல்வியடைந்தது? நிறுவனர் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியாவில் பிரபலமாக இருந்த ஹைக் (Hike) செயலி ஏன் மூடப்பட்டது என்பது குறித்து அதன் நிறுவனர் கவல் கூக் மனம் திறந்து பேசியிருக்கிறார். வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்திய இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றிருந... மேலும் பார்க்க

Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்?

இணையதள தேடுதலில் 'Mozilla Firefox, Microsoft Edge, Safari' எனப் பல 'Browser'கள் இருந்தாலும் பல ஆண்டுகளாக 3 பில்லயன் பயன்பாட்டாளர்களைக் கொண்டு முன்னணியில் கோலோச்சி வருகிறது கூகுள் குரோம் (Google Chrome... மேலும் பார்க்க

Open AI: பணியாளர்களுக்கு பெரிய அளவிலான வைப்பு போனஸ்; கவனம் பெறும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முடிவு!

ஓபன்ஏஐ நிறுவனம், தனது மூன்றில் ஒரு பங்கை பணியாளர்களுக்கு பெரிய அளவிலான வைப்பு போனஸாக வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தி வெர்ஜ் அறிக்கையின்படி, ஓபன்ஏஐ தனது தேவைப்படும் ஊழியர்களுக்கு "சிறப்பு ஒரு ... மேலும் பார்க்க

Matt Deitke: 24 வயது AI ஆய்வாளர்: நேரில் சென்று பேசிய மார்க்; ரூ.2,000 கோடி சம்பளம் - யார் இவர்?

ஏ.ஐ என்ற வார்த்தை, கொஞ்சம் கொஞ்சமாக உலகை ஆள தொடங்கியிருக்கிறது. இப்போது நிறுவனங்களும் ஏ.ஐ நிபுணர்கள், ஏ.ஐ ஆய்வாளர்களை வேலைக்கு எடுக்க தொடங்கியிருக்கிறது. அதனால், ஏ.ஐ தெரிந்திருப்பர்வகளுக்கு இப்போது தன... மேலும் பார்க்க

AI வேலைகளுக்குக் கோடிகளில் அள்ளித்தரும் ஆப்பிள் நிறுவனம்; என்னனென்ன வேலை, எவ்வளவு சம்பளம் தெரியுமா?

மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை வேலையிருந்து தூக்கிவிட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த (AI) துறைகளில் அதிமானவர்களை பணியமர்த்துவதில் தீவிரம் காட்டி... மேலும் பார்க்க