செய்திகள் :

Freebies: ``இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை" - சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

post image
தேர்தல்களின்போது இலவசங்களை அறிவிக்கும் வழக்கத்தை உச்ச நீதிமன்றம் இன்று விமர்சித்திருக்கிறது.

இந்தியாவில், தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், மக்கள் வாங்குவதும் தவறு என்றாலும் இன்று எப்படி அது தவிர்க்க முடியாத அளவுக்குச் சர்வசாதாரணமாகிவிட்டதோ, அதுபோல இலவசங்களை அறிவிப்பதும் அரசியல் கட்சிகளால் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்னும், சொல்லப்போனால் தங்களின் மற்ற வாக்குறுதிகளை விட இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளையே அரசியல் கட்சிகள் மக்களிடத்தில் முன்வைக்கின்றன.

Freebies

இந்த இலவசங்கள் உண்மையில் மக்கள் நலனுக்கு என்ற நோக்கில் மட்டும் இருக்கும்போது ஓகேதான். ஆனால், மக்களின் தேவைகள் என்னவென்பதை உணராமல், அரசின் நிதிநிலைமை என்னெவென்பதை அறியாமல் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டும் போட்டிபோட்டுக்கொண்டு இஷ்டத்துக்கு இலவசங்களை அறிவிப்பது எந்த வகையில் மக்களின் நலனுக்கானதாக இருக்கும்.

இந்த நிலையில்தான், நகர்ப்புறங்களில் வீடற்றவர்களின் தங்குமிட உரிமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பி.ஆர்.கவாய், ``துரதிர்ஷ்டவசமாக, இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை. ரேஷன் பொருள்கள் இலவசமாகப் பெறுகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல் பணம் பெறுகிறார்கள். அவர்கள் மீதான அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். அதேசமயம், மக்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தின் ஒருபகுதியாக, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்ற அனுமதித்தால் நன்றாக இருக்கும்." என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்

பின்னர், அரசு தரப்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, ``நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணியை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது நகர்ப்புற வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கும்." என்று தெரிவித்தார். அதையடுத்து, நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தை மத்திய அரசு எவ்வளவு காலத்துக்குள் இறுதிசெய்யும் என்பதைச் சரிபார்க்குமாறு ஆர்.வெங்கடரமணியிடம் தெரிவித்த நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

``தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் தொல்லை..'' -உங்கள் பகுதியில் நடந்தது என்ன? - #கருத்துக்களம்

நன்றியுள்ளப் பிராணியாக கொண்டாடப்படும் நாய், பலரின் செல்லப் பிரணியாகவும் வளர்ந்து வருகிறது. சிலர் 'தெரு நாய்களும் பாவம்' எனக் காருண்யத்துடன் உணவு வழங்கி பராமரித்து வருகின்றனர். வீடுகளில் வளர்க்கும் நாய... மேலும் பார்க்க

Dog Bite: `நாய் கடி பிரச்னையில் தமிழ்நாடு 2-வது இடம்..' -அரசு சொல்வதென்ன?

இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சுமார் 22 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் ... மேலும் பார்க்க

ஹஜ் பயணம்: `குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை' - காரணம் என்ன? - விளக்கும் சவுதி அரேபியா!

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளின் ஒன்று மக்கா செல்வது. வசதியும், உடல் ஆரோக்கியமும் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிப்பாக மக்கா சென்று ஹஜ் செய்ய வேண்டும். இந்த நிலையில், சவூதி அரேபியா அரசு இந்த ஆண்டு... மேலும் பார்க்க

Corruption: `லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகள்..' -இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

2024-ம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் குறியீட்டில் (Corruption Perceptions Index - CPI) இந்தியா 96-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளின் ஊழல் லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparenc... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டில் குவிந்த அதிமுக நிர்வாகிகள் -அவரச ஆலோசனையா? -பரபரப்பில் அதிமுக

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஊட்டி: `விடைத்தாள் இல்லை என தேர்வு ரத்து’ - கலெக்டர் தலைமையில் இயங்கும் பள்ளியின் அவலம்

பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் தொடங்கப்பட்ட பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி 150 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்ல... மேலும் பார்க்க