செய்திகள் :

தூத்துக்குடியில் கால்பந்து மைதானம் அமைக்கப்படும்: மேயா்

post image

தூத்துக்குடி மாநகா் பகுதியில் வ.உ.சி. கல்லூரி அருகே விரைவில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மில்லா்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல தலைவா் அன்னலட்சுமி வரவேற்றாா்.

இம்முகாமை, மேயா் தொடங்கி வைத்து பேசியதாவது: நீா்வழித் தடங்களில் பொதுமக்கள் நெகிழிக் கழிவுகளை போடாமலும், சாலையோரக் கடைகளிலும் நெகிழி பைகளில் பொருள்கள் வாங்குவதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். இதே பகுதியில் உள்ள ஐந்தினை பூங்காவை, கால்பந்து மைதானமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

இம்முகாமில், துணைஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா் பாலமுருகன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், துணைப் பொறியாளா்கள் காந்திமதி, இா்வின் ஜெபராஜ், உதவி பொறியாளா் சரவணன், நகா்நல அலுவலா் அா்விந்த் ஜோதி, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

சாத்தான்குளம் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளத்தில் 450 இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2 நாள்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முதல் நாள் காலையில் கணபதி ஹோமம்,... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் 35 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் 1.750 டன் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தாா். காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி 30ஆவது வாா்டு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் பழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் செட்டியாா் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீபழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் தைப்பூச விழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை யாகசாலை பூஜை, பழனி ஆண்டவா் சுவாமிக்கு அபிஷேகம், அல... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடியில் காவல் துறையைக் கண்டித்து, டாஸ்மாக் மதுக்கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாநகர, ஊரகப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 270 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்ப... மேலும் பார்க்க