செய்திகள் :

Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?

post image

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன.

வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட அழிப்பு, நீர்நிலைகளுக்குச் செல்லும் பாதைகளில் தடுப்பு வேலிகள் போன்ற பல்வேறு காரணங்களால் காடுகளை இழந்து தவிக்கும் காட்டுமாடுகள், குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் தஞ்சமடையும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

காயம்பட்ட காட்டுமாடு

மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடமாடும் காட்டுமாடுகளுக்கு சுருக்கு கம்பிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், மின் வேலிகள், உடைந்த கண்ணாடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், உலோக குழாய்கள் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன.

உலோக குழாயில் சிக்கிய காட்டுமாடு (Indian Gaur)

இவற்றால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படும் காட்டுமாடுகளின் உடல் ரணப்பட்டு மரண வேதனையில் துடித்து இறக்கின்றன.

வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அவற்றைப்‌ பிடித்து சிகிச்சை அளித்து விடுவிக்கின்றனர். காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி ரணத்துடன் தவித்த காட்டுமாட்டை கடந்த மாதம் கோத்தகிரி, பெட்டட்டி பகுதியில் மீட்ட வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிளாஸ்டிக் குழாயை அகற்றியுள்ளனர். சிகிச்சை அளித்து மீண்டும் விடுவித்துள்ளனர்.

சிகிச்சை

இந்த நிலையில், கோத்தகிரி பகுதியில் இரண்டு காட்டுமாடுகளின் கால்களில் உலோகங்கள் சிக்கி நடமாட முடியாமல் தவிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கால்நடை மருத்துவர்களுடன் அந்த பகுதிக்குச்‌ சென்ற வனத்துறையினர், இரண்டு காட்டுமாடுகளுக்கும் மயக்க ஊசி செலுத்தி காலில் இருந்த உலோகங்களை அகற்றி சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

தொடரும் இந்த துயரம் குறித்து தெரிவிக்கும் வனத்துறை, " சுமார் 4 வயதுடைய பெண் காட்டுமாடு ஒன்று இடது பின்னங்காலில் எவர்சில்வர் வளையம் சிக்கியதால் காயத்துடன் நடமாடியது கண்டறியப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி அதன் காலில் சிக்கியிருந்த எவர்சில்வர் வளையம் அகற்றப்பட்டது.

அதே போல் கோத்தகிரி சக்தி நகர் மலைப் பகுதியில் சுமார் 8 வயதுடைய ஆண் காட்டுமாடு ஒன்றின் வலது பின்னங்காலில் சிக்கிய எவர்சில்வர் பாத்திரத்துடன் நடமாடியது கண்டறியப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி காலில் சிக்கியிருந்த எவர்சில்வர் பாத்திரம் அகற்றப்பட்டது. வீடுகள், வணிக நிறுவனங்களின் உணவு கழிவுகள் முதல் உலோக கழிவுகள் வரை எதையும் கண்ட இடங்களில் தூக்கி எறியாமல், முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.

காயம்பட்ட காட்டுமாடு

நமது சிறிய அலட்சியம் தான் காட்டுமாடுகளை பெரிய துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றன. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காயங்களுடன் நடமாடும் காட்டு மாடுகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்." என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Ahmedabad Plane Crash: 'ஏர் இந்தியா இந்த ஆய்வைச் செய்யவில்லை' - முதல்கட்ட அறிக்கை தகவல்

கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.எரிவாயுவில் எதாவது பிரச்னையா? விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமா... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'அது சரியாக வேலை செய்யவில்லை; காரணம்...' - முதல்கட்ட அறிக்கை சொல்வது என்ன?

அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.அந்த அறிக்கையில், "விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது முதல்கட்ட அறிக்கை

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது. இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்... மேலும் பார்க்க

கோத்தகிரி: நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய கணவன்; கர்ப்பிணி மனைவி கண்முன்னே நொடியில் நடந்த துயரம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். இவரின் மனைவி மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு நத்திஷ்குமார் என்ற பெயரில் இரண்ட... மேலும் பார்க்க

குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இ... மேலும் பார்க்க

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில... மேலும் பார்க்க