செய்திகள் :

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

post image

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளை யுனெஸ்கோவின் பாரம்பர்ய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக மகாராஷ்டிரா தொல்லியல் துறை மற்றும் கலாசாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக வேலை செய்தனர்.

அதன் பயனாக மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் சத்ரபதி சிவாஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளை யுனெஸ்கோ உலகப் பராம்பர்ய சின்னங்களாக அறிவித்து இருக்கிறது.

செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டை

அதில் 7 கோட்டைகள் மும்பை வட்டாரத்திற்குள் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் மற்ற பகுதியில் 4 கோட்டைகள் இருப்பதாக மகாராஷ்டிரா தொல்லியல் துறை அதிகாரி அபிஜித் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இக்கோட்டை செஞ்சியில் இருக்கிறது. யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பு மூலம் மகாராஷ்டிராவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இது குறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “சத்ரபதி சிவாஜியின் கோட்டைகளை யுனெஸ்கோ உலகப் பாரம்பர்ய சின்னங்களாக அறிவித்து இருப்பது வரலாற்று பெருமை. சத்ரபதி சிவாஜி மகாராஜின் 12 கோட்டைகள் இப்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய பட்டியலில் உள்ளன.

நமது நாட்டின் அன்புக்குரிய தெய்வமான மக்களின் மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் 12 கோட்டைகள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.'' என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஏற்கனவே சத்ரபதி சிவாஜி ரயில்நிலைய கட்டிடம், அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா குகைகள் போன்றவை யுனஸ்கோவின் புராதான சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கோட்டைகள் ஷால்ஹர், சிவ்னெரி, லோஹாகட், ராய்கட், காந்தேரி, பிரதாப்கட், சுவர்னதுர்க், சிந்துதுர்க் போன்ற இடங்களில் இருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வரு... மேலும் பார்க்க

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னையை... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க

ஆந்திரா: கடலுக்குச் சென்ற மீனவரை இழுத்துச் சென்ற 200 கிலோ கருப்பு மார்லின் மீன்; என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம்... மேலும் பார்க்க