செய்திகள் :

Kim Sae-ron: சடலமாக மீட்கப்பட்ட பிரபல கொரிய நடிகை; கொலையா, தற்கொலையா..? -விசாரணையில் காவல்துறை!

post image

தென் கொரியாவின் பிரபல நடிகை கிம் சே-ரோன். 24 வயதான இவர், 2010-ம் ஆண்டு 'தி மேன் ஃப்ரம் நோவேர்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப்படத்தில் கடத்தப்பட்ட குழந்தையாக நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். தென் கொரியாவின் சிறந்த புதிய நடிகைக்கான விருதையும் வென்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பல்வேறு விருதுகளையும் குவித்தார். இந்த நிலையில், 2022-ம் ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஒரு விபத்தை சந்தித்தார். அதற்காக அவருக்கு 20 மில்லியன் வோன் ($13,800) அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது முதல் அவரின் நடிப்பு வாழ்க்கை சிக்கலை சந்திக்கத் தொடங்கியது.

கிம் சே-ரோன் - Kim Sae-ron

மக்கள் அவரைப் பார்த்து வந்தப் பார்வை மாறியதாகக் கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரைக் காணச் சென்ற அவரின் நண்பர் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து, அவரின் உடலைக் கைப்பற்றியிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் கொலை நடந்ததுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனக் காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை தொடரும் எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க

Ranveer Allahbadia: ``இவர் மூளையில் அழுக்கு..." - யூடியூபரை விளாசிய உச்ச நீதிமன்றம்!

India's Got Latent Show என்ற யூடியூப் நிகழ்ச்சியில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா செய்த சர்ச்சைக்குரிய நகைச்சுவை குறித்த பல்வேறு வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சமய் ரெய்னா என்ற ... மேலும் பார்க்க

` வழக்கறிஞர் மீது தாக்குதல்' -திமுக அலுவலம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார்43. இவர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இவரின் மகளை அழைக்க டூவிலரி... மேலும் பார்க்க

ஆவடி: "பங்குச் சந்தையில போட்டா..." - இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது ... மேலும் பார்க்க

பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!

சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர... மேலும் பார்க்க