செய்திகள் :

MV Wan Hai 503: எரியும் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முயற்சி - கயிறுகட்டிய எம்.இ.ஆர்.சி குழு!

post image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற எம்.வி வான் ஹாய் 503 (MV Wan Hai 503) என்ற கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து விபத்துக்குள்ளனது. கப்பலில் இருந்த 22 ஊழியர்களில் 18 பேர் மீட்கப்பட்டு மங்களூர் அழைத்துச் செல்லப்பட்டனர். தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த 2 ஊழியர்களுக்கு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான 4 ஊழியர்களை தேடும் பணி நடக்கிறது. கப்பலில் எரியும் தீயை அணைக்க கோஸ்ட் காட் கப்பல்கள் தண்ணீர் பீச்சி அடித்து வருகின்றன. தீ விபத்துக்குள்ளன கப்பல் நகர்ந்துகொண்டே இருப்பதால் தீ அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்குள்ளான கப்பல்

இதற்கிடையே கப்பலில் 40 சதவிகிதம் தீ அணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் அல்லாது தீ எரியும்போது அவ்வப்போது பொருட்கள் வெடித்து சிதறிவந்த நிலையில் வெடி சத்தம் நின்றதாகவும் கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், கப்பலில் இருந்து கரும்புகை வெளியாகிக்கொண்டே இருக்கிறது. கப்பலில் 2000 டன் எரிபொருளும், 240 டன் டீசலும் உள்ளதாகவும், அதில் தீபிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கப்பலை கட்டி இழுத்துச் செல்வதற்கு முன்னோட்டமாக முன்பக்கம் பெரிய ரோப் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேகர் குரியகோஸ்

இதுபற்றி கேரளா பேரிடர் மேலான்மை ஆணைய உறுப்பினர் செயலாளர்  சேகர் குரியகோஸ் கூறுகையில், "எம்.இ.ஆர்.சி போர்பந்தர் குழுவினர் இந்தியன் கோஸ்ட் கார்ட் ஹெலிகாப்டர் உதவியுடன் கப்பலில் இறங்கியுள்ளனர். மேலும் கப்பலின் முன்பகுதியில் உள்ள ஹூக் பகுதியில் பெரிய ரோப் கட்டியுள்ளனர். அந்த கயிறு வாட்டர் லில்லி எனப்படும் டக் போட்டில் கட்டியுள்ளனர். விரைவில் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் முயற்சியின் ஒருபகுதியாக இது செய்யப்பட்டுள்ளது. எரியும் கப்பலில் இறங்கி இதுபோன்று செய்யப்பட்டது மிகப்பெரிய அச்சீவ்மெண்ட் ஆகும். இப்போது கேரளாவில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் முயற்சி நடந்துவருகிறது" என்றார்.

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவிட்டது" - அமித் ஷா

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.விமான நிலையத... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "என் குழந்தையே எங்கே போனாய்..!" - கதறி அழும் விமான பணிப்பெண்ணின் குடும்பம்

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலைய... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: `மகளைக் காண லண்டன் கிளம்பினார்'- விபத்தில் சிக்கி முன்னாள் முதல்வர் மரணம்

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் ஒரு... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: `கருப்புப் பெட்டி கிடைத்தால்தான்...' - விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர்

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளாகி, அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்... மேலும் பார்க்க