செய்திகள் :

Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவிலங்கு வேட்டை

post image

மரக்கடத்தல் முதல் வனவிலங்கு வேட்டை வரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனக்குற்றங்கள் அதிகரித்து வரும் நீலகிரியில் கேரள வேட்டை கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காட்டு மாடு வேட்டை கண்மூடித்தனமாக நடைபெற்று வருகிறது.

காட்டு மாடு வேட்டை

வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கி தோட்டாக்கள், வெட்டி பார்சல் செய்ய கத்தி, கோடாரிகள் கச்சிதமாக காரில் முழு தயாரிப்புடன் சுற்றுலா பயணிகள் போல வாகனங்களில் ஊடுருவும் கேரள வேட்டைக் கும்பல்கள், இரவோடு இரவாக காட்டு மாடுகளை வேட்டையாடி இறைச்சியை கேரளாவிற்கு கொண்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள கப்பத்தொரை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடமாடிய வேட்டையர்கள், அந்த பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்டு மாட்டினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். தோட்டா சத்தம் கேட்டு மக்கள் கூடியதைத் தொடர்ந்து அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

காட்டு மாடு வேட்டை

கேரள பதிவெண் கொண்ட அந்த வாகனத்தை விரட்டிச் சென்ற வனத்துறையினர், கூடலூர் அருகில் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு மாட்டை வேட்டையாடிய கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியைச்‌ சேர்ந்த அனீஷ் மோன், நிஷார் ஆகிய இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`நடிக்க வாய்ப்பு; திருமணம்’ - நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண்

பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் நடிப்பில் சமீபத்தில் ஒ.டி.டி.யில் வெளியான `ஹவுஸ் அரஸ்ட்’ வெப்சீரியஸ் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஹவுஸ் அரஸ்ட் வெப் சீரியஸ் Ullu App என்ற செயலில் வெளியானது. அதில... மேலும் பார்க்க

திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; சிறுவன் குத்திக் கொலை... கொலையாளிகளைத் தேடும் போலீஸ்!

கரூர் மாவட்டம், குளித்தலை கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்ம... மேலும் பார்க்க

`சென்னையில் கொள்ளை… தூத்துக்குடியில் கைது!' - வைர நகை கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரியான இவர், வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 3-ம் தேதி சந்திரசேகரின் வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்த அருள்ராஜ், ரூ.... மேலும் பார்க்க

`தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்' ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர் தப்பிக்க ஆற்றில் குதித்து மரணம்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இம்தியாஸ் அகமது மக்ரே, தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், கடந்த சனிக்கிழமை மக... மேலும் பார்க்க

``பழைய 5 ரூபாய் நோட்டுக்கு ஒரு கோடி..'' ஆசைகாட்டி துப்புரவு தொழிலாளியிடம் ரூ.18 லட்சம் மோசடி

மோசடிகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. மும்பையில் `பழைய 5 ரூபாயை கொடுத்தால் ஒரு கோடி கொடுப்போம்' என்று கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு சமூக வலைத... மேலும் பார்க்க

மும்பை: `கார் சதுரங்க வேட்டை' 1375 பேரிடம் ரூ.20 கோடி மோசடி செய்த கும்பல்.. 246 வாகனங்கள் மீட்பு

மும்பையில் நடந்த வாடகை கார் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்த பாவேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து மிகப்... மேலும் பார்க்க