செய்திகள் :

Operation Sindoor பெயரில் திரைப்பட அறிவிப்பு; கிளம்பிய எதிர்ப்பால் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறும் இந்தியா, பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இப்படி மாறி மாறி இரு நாடுகளும் தாக்குதலை நடத்துகின்றன. அதனால் தற்போது இரு நாட்டுக்கும் மத்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Operation Sindoor movie poster
Operation Sindoor movie poster

இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கப்போவதாக இயக்குநர் உத்தம் மகேஸ்வரி அறிவித்தார். வெள்ளிக்கிழமை, நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் போஸ்டரையும் வெளியிட்டனர். அதில் சீருடை அணிந்த ஒரு பெண் ராணுவ வீராங்கனை ஒரு கையில் துப்பாக்கியும், மற்றொரு கையால் நெற்றியில் குங்குமம் பூசுவது போலவும் இருந்தது.

இந்தப் போஸ்டரைத் தொடர்ந்து இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதைத் தொடர்ந்து இயக்குநர் உத்தம் மகேஸ்வரி சமூக ஊடகத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், ``புகழுக்காவோ, பணத்துக்காகவோ அல்லாமல் நமது வீரர்கள் மற்றும் தலைமையின் தைரியம், தியாகம், வலிமையால் நெகிழ்ந்து ஆபரேஷன் சிந்தூர் படத்தை இயக்க விரும்பினேன்.

உத்தம் மகேஸ்வரி
உத்தம் மகேஸ்வரி

இதை அறிவிப்பதன் மூலம், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர் பட அறிவிப்புக்கு உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எனது செயலுக்காக மிகவும் வருந்துகிறேன். எப்போதும் தேசம் முதலில் என்ற குறிக்கோளுடன் நாட்டிற்காக இரவும் பகலும் உழைத்து நம்மை பெருமைப்படுத்தும் நமது ராணுவத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. எங்கள் அன்பும் பிரார்த்தனையும் எப்போதும் வீரர்களுடனும் இருக்கும். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த வாசகம் இந்தியா முழுவதும் தேசபக்திக்கான அடையாளமாக மாறியிருக்கிறது.அதனால் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் வார்த்... மேலும் பார்க்க

`ஒரே நேரத்தில் 18 பாட்டில் குடிப்பேன்; ஒரே நாளில் நிறுத்தியது எப்படி?’ - பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்

பழம்பெரும் பாலிவுட் கதாசிரியர் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகை ஷபானா ஆஸ்மியை திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழில் வைரமுத்துவின் பாடல்கள் போன்று இந்தியியில் ஜாவேத் அக்தரின் பாடல்கள் மிகப் பிர... மேலும் பார்க்க

Deepika Padukone: மகளுக்கு `துவா' எனப் பெயர் வைத்தது ஏன்? - தீபிகா பகிர்ந்த சுவாரஸ்யம்!

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துவா (Dua) எனப் பெயர் சூட்டியுள்ளனர்.Deepika Padukone - Ranveer Singhசமீபத்தில் தீ... மேலும் பார்க்க

`எனக்கு பிடித்த கதாபாத்திரம்' - மகாபாரத கதையில் நடிக்க விரும்பும் நடிகர் ஆமீர் கான்

ராமாயாணம் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடித்து வருகிறார். இப்போது விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ண வேடத்தில் ஆமீர் கான் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான... மேலும் பார்க்க

Shah Rukh Khan: MetGala காஸ்ட்யூமில் கலக்கும் பாலிவுட் ஸ்டார் ஷாருக் கான் | Photo Album

SRK: 20 ஆண்டுகளாக வாழ்ந்த வீடு... தற்காலிகமாக காலி செய்யும் ஷாருக்கான்; காரணம் என்ன?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் கொலை; நண்பர்கள் செய்த கொடூரம்; பெற்றோர் புகார்

பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் ரோஹித் பாஸ்ஃபோர். மும்பையில் வசித்து வந்த ரோஹித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அஸ்ஸாமிற்கு சென்றார். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் சிலருட... மேலும் பார்க்க