செய்திகள் :

OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்ன?

post image

ஓபிஎஸ் தனது அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் கடிதம் எழுதியும் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிதி வழங்க வேண்டி மத்திய அரசைக் கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதேவேளையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய்க்கு ஆதரவாகத் தீவிரமாகப் பேசி வருகிறார். இப்படியொரு சூழலில் ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு ஓபிஎஸ்ஸின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக்கொள்கிறோம். அதற்கான காரணத்தை நாடே அறியும். தமிழகம் முழுக்க ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். எந்தக் கட்சியுடனும் இப்போதைக்குக் கூட்டணி இல்லை. எதிர்காலத்தில் நிலைமையைப் பொறுத்து முடிவெடுப்போம்" என்றார்.

3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனையின் முடிவிலேயே இந்த 3 தீர்மானங்களையும் எடுத்திருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரோடு ஓபிஎஸ்ஸின் மகன்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஆலோசனைக் கூட்டம் முடிந்து ஓபிஎஸ் கிளம்புகையில், "நம்பிக்கைத் துரோகி எடப்பாடி ஒழிக.. குருமூர்த்தி ஒழிக.. அண்ணாமலை ஒழிக..." என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க