செய்திகள் :

Padma Awards: அஜித் குமார், அஷ்வின், செஃப் தாமு, பறையிசை வேலு ஆசான்; பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்

post image

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பத்ம பூஷண் விருதுகள் பெறுபவர்கள்

கலைத்துறையில் நடிகர்கள் அஜித்குமார், ஷோபனா இருவருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கலைத்துறை

மதுரையைச் சேர்ந்த பறையிசை கலைஞர் வேலு ஆசான்.

புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் கலைஞன் தட்சணாமூர்த்தி.

தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை

கும்பகோணம் சிற்பி ராதாகிருஷ்ணன் தேவ சேனாதிபதி

ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டிற்கு 27 அடி உயரம், 21 அடி அகலம், 21 டன் எடை கொண்ட அஷ்டதாகு லோக நடராஜர் சிலை வடிவமைத்தவர் தேவ சேனாதிபதி. 

இலக்கியத் துறை

சுதந்திரப் போராட்ட வீரர், தத்துவவாதி மற்றும் பத்திரிகையாளருமான தினமலர் நிறுவனர் ராமசுப்பையர்.

தெருக்கூத்து கலைஞர் பி.கே.சம்பந்தன்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி ஆய்வில் ஈடுபட்டுவருபவர் சீனி. விசுவநாதன்.

வர்த்தகம் தொழில்துறையில் ஆர்.ஜி.சந்திரமோகன், பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் எம்.டி.சீனிவாஸ் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Padma Awards: ``மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்..'' - பத்ம விருது பெற்ற செஃப் தாமு

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

Padma Awards: பத்ம பூஷண் விருதைப் பெற்றார் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

திமுக அமைச்சரவையில் தொடர்ந்து பந்தாடப்படும் வனத்துறை... என்னதான் பிரச்னை?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் இருந்த வனத்துறை, 2021 தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரா... மேலும் பார்க்க

``மிரட்டலுக்கு பயந்து தான் பங்கேற்கவில்லை..'' - மேடையில் குமுறிய கவர்னர்; ஊட்டி ராஜ்பவன் அப்டேட்ஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு உண்டு. கவர்னரே வேந்தராக தொடர்வார் எனக்கூறி ஆளுநர் மாளிகை தரப்பில் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள... மேலும் பார்க்க

`திமுக-வுக்கு இவ்வளவு அடிமையாக திருமாவளவன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை..!’ - தமிழிசை சௌந்தரராஜன்

“ ‘2026 தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என அமித் ஷா சொல்கிறார். மறுபக்கம் எடப்பாடியோ ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்கிறாரே?”``இந்த கூட்டணி அமைத்ததிலிருந்தே, தி.மு.க-வுக்கும் அதன் கூட்ட... மேலும் பார்க்க