செய்திகள் :

Pakistan: "தோட்டாவிற்குத் தோட்டா எனப் பதில் அளிக்க வேண்டுமா?" - பாகிஸ்தானிடம் மோடி கேள்வி

post image

பிரதமர் மோடி குஜராத்திற்குச் சென்றிருக்கிறார். பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அவர் முதன்முதலாகத் தனது சொந்த மாநிலத்திற்குச் சென்றிருக்கின்றார்.

அங்கே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, "ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது.

இந்தியாவிலிருந்து தீவிரவாதம் என்னும் முள்ளை அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். தீவிரவாதம் என்பது பிராக்ஸி போர் அல்ல... அது உங்களுடைய (பாகிஸ்தான்) தந்திரம். அப்படி நீங்கள் எங்கள் மீது போர் தொடுக்கிறீர்கள்.

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

75 ஆண்டுகளாகச் சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக சுற்றுலாப் பயணிகள், மக்கள் என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் நீங்கள் தாக்குதல் நடத்தினீர்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா?

அதற்குப் பதில், தோட்டாவிற்குத் தோட்டா என நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா?

இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், எங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கும்போது திரும்பத் தாக்க யோசிக்கமாட்டோம். எங்களுடையதும் போர் வீரர்களின் பூமிதான் என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறோம்.

நான் இங்கு இரண்டு நாட்களாக இருக்கிறேன். அனைத்து இடங்களில் காவிக் கடல் கொக்கரிப்பது போல உணர்கிறேன். மூவர்ணக் கொடியும், தாய் நாட்டின் மீது அதீத அன்பும் அனைத்து உள்ளங்களில் தெரிகிறது.

தீவிரவாதம் உங்களுக்கு என்ன நன்மையைத் தந்தது? இதைப் பாகிஸ்தான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தானைத் தீவிரவாதம் என்னும் நோயிலிருந்து விடுவியுங்கள். அமைதியான வாழ்க்கை வாழுங்கள், நன்கு உண்ணுங்கள் அல்லது என்னுடைய தோட்டாக்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

"நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்" என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு... மேலும் பார்க்க

Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal - சோகத்தில் வைகோ? | DMK| Imperfect Show 28.5.2025

* ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு!* திமுக அரசைக் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி!* மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு* மாந... மேலும் பார்க்க

TVK : 'உதயநிதி ஒரு சோட்டா பச்சா; திமுக ஒரு ஸ்டிக்கர் அரசு' - தவெக கொ.ப.செ ராஜ் மோகன்

'தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!'அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தவெக சார்பில் அக்கட்... மேலும் பார்க்க

’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் உள்ள ந... மேலும் பார்க்க

ED பயம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்? - நயினார் நாகேந்திரன்

வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே நடைபெறும் இம்மாநாட்டுக்கான பூமி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன் ர... மேலும் பார்க்க