செய்திகள் :

Rajinikanth : ரொம்ப தேங்ஸ் ரஜினி; இப்போவாச்சும் மறக்காம பேசுனீங்களே! - துரைமுருகன் கலாய்

post image

'துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பு!'

திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினி வேள்பாரி நிகழ்ச்சியில் பேசியது பற்றியும் விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் பற்றியும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

துரைமுருகன்
துரைமுருகன்

விகடன் பதிப்பகத்தில் வெளியான வேள்பாரி நாவல் விற்பனையில் 1 லட்சம் பிரதிகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், வேள்பாரி வெற்றிப் பெருவிழா கடந்த வெள்ளியன்று நடந்திருந்தது.

'ரஜினி அடித்த கமென்ட்!'

அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். ரஜினிகாந்த் பேசுகையில், 'எ.வ.வேலுவோட புத்தக வெளியீட்டு விழால, திமுகல ஓல்டு ஸ்டூடண்ட்ஸ சமாளிக்கிறது கஷ்டம்னு பேசியிருந்தேன். அதுக்கு கிடைச்ச கைத்தட்டுல, அடுத்து சொல்ல வந்த 'ஆனாலும் ஓல்டு ஸ்டூண்டஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்.' என நகைச்சுவையாகப் பேசியிருந்தார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

'துரைமுருகன் ரியாக்சன்!'

ரஜினியின் இந்த கமென்ட் குறித்து துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 'ரஜினிக்கிட்ட போன்ல பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி, இப்போவாச்சு மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்!' (நகைச்சுவையாக..). என்றார்.

Vijay
Vijay

'விஜய்க்கு எச்சரிக்கை!'

தொடர்ந்து, 'இந்த ஆட்சி முடியுறதுக்குள்ள நீங்க செஞ்ச தப்புகளை நீங்களே திருத்திடுங்கன்னு...' விஜய் பேசியிருக்காரே என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு துரைமுருகன், 'எங்களை கேள்வி கேட்கக் கூட விஜய் வரமாட்டாரா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்குக் கூட வர முடியாது.' என்றார்.

'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இதுசம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்திக்கையில் விஜய்யை கடுமையாக... மேலும் பார்க்க

`மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை; அதன் தொடர்ச்சியே `உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்'- ஆர்.பி.உதயகுமார்

"மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆர்.பி. உதயகுமார்இது குறித்து அவர் வெளியிட்... மேலும் பார்க்க

'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்

தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மோகன் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.ஆதவ் அர்ஜூனாஅந்தப்... மேலும் பார்க்க

`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை ... மேலும் பார்க்க

Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’ - மல்லை சத்யா வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரை... மேலும் பார்க்க