செய்திகள் :

`Snickers தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்' - நண்பர்கள் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!

post image

Snickers தீமில் சவப்பெட்டி வேண்டும் என்று விளையாட்டாக ஒருமுறை கேட்ட நபருக்கு, அவரது விருப்பப்படியே அடக்கம் நடந்துள்ளது.

வாழ்க்கை எல்லாருக்கும் நாம் நினைத்தபடி அமைவதில்லை. மரணமும் அப்படியே. ஆனால் பால் ப்ரூமே என்ற 55 நபருக்கு தான் நினைத்தபடியான இறுதிச்சடங்கு கிடைத்துள்ளது.

ப்ரூமே துல்லியமான டைமிங் காமடிகளுக்காக அவரது நண்பர்கள் வடடாரத்தில் பிரபலமானவர். அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

Snickers

இறப்பதற்கு முன்பு ஸ்னிக்கர்ஸ் போன்ற சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படுவது பற்றி ஜோக்கடித்துள்ளார். செண்டிமெண்டாக அதையே இறுதி சடங்கில் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.

அவரது நகைச்சுவை உணர்வு மிக்க ஆளுமையை பிரதிபலிக்கும் விதமாக, அந்த பெட்டியில் "I'm nuts" (நான் பைத்தியம்) என எழுதியுள்ளனர்.

இந்த சவப்பெட்டி குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன. பலரும் இந்த விசித்திரமான இறுதிச் சடங்கு குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அவரது குடும்பத்தினர், "பால் வாழ்க்கையில் அப்பட்டமான கதாப்பாத்திரமாக இருந்தவர், அவரை பிரதிபலிக்கும் விதமாக இந்த சடங்கு இருக்க வேண்டும்" என விளக்கம் அளித்துள்ளனர்.

பால் ப்ரூமே

அவரது தனித்துவத்தை பிரதிபலிக்கும் Snickers சவப்பெட்டியில், அவருக்கு விருப்பமான கிறிஸ்ட்டல் பாலஸ் கால்பந்து கிளப் லோகோவும் இடம் பெற்றுள்ளது.

பால் ப்ரூமேவின் இறுதிச்சடங்கில் அவரது நண்பர்கள் ஸ்பெஷலான டி - சர்ட் அணிந்து கலந்துகொண்டுள்ளனர். ஒரு மனிதனின் வாழ்க்கை அவரது இறுதி சடங்கில் வெளிப்படும் எனக் கூறுவார்கள், இந்த தனித்துவமான இறுதி சடங்கு பாலின் வாழ்க்கை நண்பர்களுடன் மகிழ்ச்சியானதாக இருந்திருக்கும் எனக் காட்டுகிறது!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்ட... மேலும் பார்க்க

UP: ``மீரட் சம்பவம் போல நடக்க கூடாது'' - மனைவியை அவர் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களில் தொடர்ந்து மனைவியால்... மேலும் பார்க்க

Ramalan: `அவர்கள் நமக்கும் நாம் அவர்களுக்கும் செய்கிறோம்' நல்லிணக்கம் காக்கும் ரமலான் நோன்புக் கஞ்சி

இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் பெரும்பகுதி முகாமிட்டிருந்தது வட இந்தியாவில்தான் என்பது வரலாறு சொல்லும் தகவல். அதனால்தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை ஆண்டிருக்கிறார்கள் என்ற உணர்வால... மேலும் பார்க்க

5 ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக சாப்பிட முயன்று சிக்கிய Influencer; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் ஒருவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயன்று மாட்டியதால், சாப்பிட்ட பஃபே சாப்பாட்டுக்கு 3,600 ரூபாய் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்... மேலும் பார்க்க

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்

தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று... மேலும் பார்க்க

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க