செய்திகள் :

TASMAC: போதையில் கோஷ்டி மோதல்; மது பாட்டிலால் அடித்து இளைஞர் படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி

post image

திருச்சி, கோட்டை காவல் சரகத்திற்கு உள்பட்ட தேவதானம் பகுதியில் அரசு மதுபான கடையோடு இணைந்த பார் ஓன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பாரில் சஞ்சீவி நகரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகன் கற்குவேல் (வயது: 44) தனது நண்பரான மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் மது அருந்தச் சென்றார். அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த சுப்பிரமணி, ராஜூ மற்றும் கண்ணாயிரம் ஆகிய மூவரும் மது போதையில் உரக்க பேசிக் கொண்டிருந்தனர்.

இதை சரவணன் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு இரு தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு கைகலப்பாக மாறியது.

dead

அப்போது சுப்பிரமணி தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் கற்குவேலின் தலையில் அடித்தார். இந்த திடீர் தாக்குதலில் நிலை தடுமாறி கீழே விழுந்த கற்குவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சரவணன் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியதில் சுப்பிரமணியன், ராஜூ, கண்ணாயிரம் மூவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த சுப்பிரமணி, ராஜூ ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட கண்ணாயிரம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற மதுபான பார் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

tasmac bar

சட்டத்திற்கு புறம்பாக எந்நேரமும் இங்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதனால், இங்கு அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த மதுபான கடை மற்றும் பாரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் பேரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகறாரில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்த... மேலும் பார்க்க

``எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..'' - கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ... மேலும் பார்க்க

புதுச்சேரி அதிகாரியிடம் அந்தரங்க வீடியோவைக் காட்டி மிரட்டல்; 3 பெண்கள் கைது; பின்னணி என்ன?

புதுச்சேரி மின்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், இருவரும் சந்திக்கலாம் என முடிவு... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பன்; கொன்று வீட்டில் புதைத்த அண்ணன்; என்ன நடந்தது?

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன். மீன்பிடித்தல் உள்ளிட்ட கூலி வேலை செய்து வருபவர்.இவரைக் கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரி ராணி என்பவர், சில நாட்களுக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack : சிறுவயது நண்பர்களின் முதல் பயணம்... இறுதிப்பயணமாக மாறிய சோகம் - நடந்தது என்ன?

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் மும்பை டோம்பிவலியை சேர்ந்த சஞ்சய் லீலா, அதுல் மோனே, ஹேமந்த் ஜோஷி ஆகியோர் உயிரிழந்தனர்.... மேலும் பார்க்க

சென்னை: பெட்டிக்கடை பெண்ணிடம் செயின் பறிப்பு; கைவரிசை காட்டிய தம்பதியை மடக்கிப் பிடித்த மக்கள்!

சென்னை கே.கே.நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மனைவி காந்தா (52). இவர்கள் மணப்பாக்கம், பார்த்தசாரதி நகரில் காய்கறி, கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேத... மேலும் பார்க்க