செய்திகள் :

TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்; பின்னணி என்ன?

post image

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதாக கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு தவற்றுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அகில இந்திய அய்யா பதிகள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் இரா.ராமலிங்கத்திடம் என்ன நடந்தது எனக் கேட்டோம்.

ராமலிங்கம்
ராமலிங்கம்

''தமிழ்நாடு பப்ளீக் சர்வீஸ் கமிஷன் நேத்து ஒரு தேர்வை நடத்தியிருக்கு. இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு அது. இந்தத் தேர்வுலதான் பொது அறிவு வினாக்கள் பகுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கு.

'அய்யா வைகுண்டர் குறித்த தகவல்களில் எதுவெல்லாம் சரி' என ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலாகச் சில பதில்களைத் தந்திருக்கிறார்கள்.

அடிப்படையிலேயே கேள்வி தவறானது. அதாவது அய்யா வைகுண்டர்தான் அவருடைய ஒரே நாமம். அதனால் முந்தைய அவதாரங்களின் பெயர்களைக் கூட வைகுண்டர் பக்தர்கள் உச்சரிக்க மாட்டாங்க. ஏன் எங்களுடைய புனித நூலான அகிலத் திரட்டுலயே இந்தப் பெயர்கள் இருக்காது. அதனால எங்களைப் பொறூத்தவரை இந்தக் கேள்வியே தப்பு. இருந்தாலும் பழைய வரலாறு தெரிஞ்சுக்கிறதுல தப்பில்லைங்கிறதால இதைக் கூட பொறுத்துக்கலாம்.

tnpsc question

ஆனா இதே கேள்வியில் மொழிபெயர்க்கிறோம்கிற பெயர்ல 'முடிசூடும் பெருமாள்'ங்கிற வார்த்தையை 'காட் ஆஃப் ஹேர் கட்டிங்'னு ஆங்கிலத்துல குறிப்பிட்டிருக்காங்க.

இது ஏதோ தெரியாம நடந்ததா நினைக்கத் தோனலை. யாரோ வேணும்னே பண்ணியிருப்பாங்களோனு கூட நினைக்க தோணுது.

பல கோடிப் பேர் வணங்குகிற கடவுள் விஷயத்துல எப்படி இவ்வளவு கவனக் குறைவா இருப்பாங்க.

அதனாலதான் முதல்வர் இந்த விஷயத்துல உடனடியா தலையிட்டு தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு கேக்கறோம்" என்கிறார் இவர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க

`விஜய் கட்சி, அந்த 2 சமூக வாக்குகளை டார்கெட் செய்கிறது’ - 9 தொகுதிகளை அலசிய அமைச்சர் எ.வ.வேலு

செப்டம்பர் 3-ம் தேதியான நேற்று... வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க-வின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை... மேலும் பார்க்க

GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?

ஜிஎஸ்டி மாற்றம்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக... மேலும் பார்க்க

திமுக பெண் கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழுந்த விவகாரம்! – 10 பேர் மீது வன்கொடுமை வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேய... மேலும் பார்க்க