``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
TVK: "அவர் எனக்கு வாக்களித்தவர்..." - தவெக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றது குறித்து எ.வ.வேலு
தமிழ்நாடு அரசு சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரூ.300 கோடி மதிப்பில் உருவாகி வரும் இந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். 2026 ஜனவரி மாதம் முதலமைச்சர் இந்த நூலகத்தைத் திறந்து வைப்பார்.
அவிநாசி சாலை மேம்பாலப் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடையும். மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மூன்றாவது கட்ட நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்.” என்றார்.

அப்போது அவரிடம் திருவண்ணாமலை த.வெ.க நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்டது சர்ச்சையாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த எ.வ. வேலு, “அவர் என்னுடைய வாக்காளர். கடந்த முறை கூட அவர் எனக்கு வாக்களித்தவர். அவர்கள் ஒரு கூட்டுக் குடும்பமாக உள்ளனர். அவரது அண்ணன், தம்பிகள் எல்லாம் திமுக-வில் இருக்கிறார்கள்.
எனக்கு நெருக்கமான குடும்பம். அவர்கள் வீடு கட்டினார்கள். எனக்கு அழைப்பிதழ் கொடுத்து அவசியம் வர வேண்டும் என்று கூறினர். நான் கட்சி பார்த்துப் பழகுபவன் இல்லை. என் தொகுதியில் யார் எனக்கு அழைப்பு கொடுத்தாலும், கலந்து கொள்வேன். அப்படித்தான் அந்த நிகழ்விலும் கலந்து கொண்டேன்” என்றார்.

நான் கட்சி பார்த்து பழகுபவன் இல்லை. என் தொகுதியில் யார் எனக்கு அழைப்பு கொடுத்தாலும், கலந்து கொள்வேன். அப்படித்தான் அந்த நிகழ்விலும் கலந்து கொண்டேன்” என்றார்.