செய்திகள் :

US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!' - வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டுமா அமெரிக்கா?

post image

வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல், எந்த நாடு அமெரிக்காவின் மீது அதிக வரி விதிக்கிறதோ, அந்த நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க பொருள்களின் மீது இந்தியாவும் அதிக வரிகளை விதித்து வருகிறது. ஆக, இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.

இந்த நிலையில், அமெரிக்காவில் வெளியாகி உள்ள அறிக்கையினால், இந்தியாவிற்கு இன்னமும் வரி சுமை கூறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Trump | ட்ரம்ப்
Trump | ட்ரம்ப்

சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா!

அந்த அறிக்கையில், அமெரிக்காவில் அதிகம் புழங்கும் ஃபென்டனில் என்ற போதை பொருள் சப்ளையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவிற்கும் தொடர்பு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தரவுகளின் படி, கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்னாளான 12 மாதங்களில், இந்தப் போதை மருந்தால் 52,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதன்முறையாக...

போதை மருந்து அமெரிக்காவிற்குள் வருவதற்கு சீனா காரணம் என்று அந்த நாட்டின் மீது கூடுதலாக 10 சதவிகித வரி விதிக்கும் உத்தரவில் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டிருந்தார் ட்ரம்ப்.

Trump
Trump - ட்ரம்ப்

இப்போது, ஃபென்டனில் போதை மருந்து கடத்தலில் முதன்முதலாக இந்தியாவின் பெயரை உச்சரித்துள்ளது அமெரிக்கா‌.

ட்ரம்ப் கூறிய பரஸ்பர வரி இன்னும் ஒரு சில நாள்களில் வரவிருக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தற்போது அமெரிக்க வரி அதிகாரிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். அவர்களுடன் வரி குறைப்பு சம்பந்தமாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .யார் இந்த நிதி தி... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' -அமைச்சர் ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு - மக்கள் தொகை: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தொகு... மேலும் பார்க்க

`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர் - என்ன ஸ்பெஷல்?

இப்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளைகிறது. உலகின... மேலும் பார்க்க

DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார். எலான் மஸ்க் - ட்ரம்ப்... மேலும் பார்க்க

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021."சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வான... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?

Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம்சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும்கொடுக்கலாமா... மேலும் பார்க்க