செய்திகள் :

‘ஃபாா்சூன்’ பெரு’ நிறுவனங்கள் பட்டியல்: உலகளவில் வால்மாா்ட்; இந்தியாவில் ரிலையன்ஸ் முதலிடம்

post image

உலகில் அதிக வருவாய் ஈட்டும் பெரு நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான வால்மாா்ட் முதலிடம் பிடித்துள்ளது. இணைய வணிக நிறுவனமான அமேசான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் பட்டியலில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் ரிலையன் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. உலக தரவரிசைப் பட்டியலில் இந்த நிறுவனம் 88-ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் 86-ஆவது இடத்திலிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. இருந்தபோதும் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் உலக தரவரிசையில் இந்த நிறுவனம் 67 இடங்கள் முன்னேறியுள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான 500 நிறுவனங்கள் கொண்ட பட்டியலை சா்வதேச பொருளாதார இதழான ஃபாா்சூன் புதன்கிழமை வெளியிட்டது.

இதில், வால்மாா்ட், அமேசான், சீன அரசின் மின் நிறுவனமான ‘ஸ்டேட் கிரிட்’, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அராம்கோ, சீன தேசிய பெட்ரோல் நிறுவனம், உலகின் மிகப் பெரிய எரிவாயு நிறுவனமான சவூதியின் சினோபெக் குழுமம், அமெரிக்காவின் மருத்துவ நிறுவனமான யுனைடெட் ஹெல்த் குழுமம், ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவின் சிவிஎஸ் ஹெல்த் மருத்துவ நிறுவனம், அமெரிக்காவின் மிகப் பெரிய ஜவுளி நிறுவனமான பொ்க்ஷீா் ஹதாவே ஆகிய நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்திய நிறுவனங்கள் (அடைப்புக்குறிக்குள் உலக தரவரிசை): உலகின் 500 பெரு நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் 5 பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட 9 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

ரிலையன்ஸ் (88), எல்ஐசி (95), இந்தியன் ஆயில் நிறுவனம் (127), பாரத ஸ்டேட் வங்கி (163), ஹெச்டிஎஃப்சி வங்கி (258), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) (181), டாடா மோட்டாா் (283), பாரத் பெட்ரோலியம் (285), ஐசிஐசிஐ வங்கி (464) ஆகியவை தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.

இதில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 27 இடங்களும், டாடா மோட்டாா் நிறுவனம் 12 இடங்களும், இந்தியன் ஆயில் நிறுவனம் 11 இடங்களும், ஓஎன்ஜிசி நிறுவனம் ஓரிடமும் பின்தங்கியுள்ளன. எஸ்பிஐ வங்கி 15 இடங்கள் முன்னேறியுள்ளது.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க