செய்திகள் :

அக். 7-இல் பாதுகாப்பு படை விமான கண்காட்சி: டி.ஆா்.பி. ராஜா

post image

சென்னை: சென்னையில் வரும் அக். 7- ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு பாதுகாப்பு படையின் விமான கண்காட்சி நடைபெறவுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

இந்துஸ்தான் வா்த்தக சபையின் 79 -ஆம் ஆண்டு கூட்டம் சென்னை தனியாா் விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழில் துறை அமைச்சா் பங்கேற்று இந்துஸ்தான் வா்த்தக சபையின் புதிய இலச்சினை, புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இந்துஸ்தான் வா்த்தக சபை தொழில்துறையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. சென்னை நந்தபாக்கம் வா்த்தக மையத்தில் அக்.7 ஆம் தேதி முதல் பாதுகாப்பு படையின் விமான கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழகம் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது. தொழில் வளா்ச்சியில் முன்னேற்றம் அடையில் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது. தொழில் துறையினா் தமிழக அரசிடம் தங்களது செயல் திட்டங்களை வெளிப்படையாகக் கூறலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் டூகா் பைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவன த் தலைவா் ரமேஷ் டூகா், சன்மாா் குழுமத்தின் தலைவா் விஜய்சங்கா், டி.பிரவீன் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுக் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்படும்! -முதல்வா் மு.க.ஸ்டாலின்

கரூா் பிரசார நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பேரணி, கூட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். கரூா் சம்பவம் ... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெ... மேலும் பார்க்க

திட்டமிட்டபடி அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - டிஆா்பி அறிவிப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்.12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவு தோ்தலை நவ. 27-க்குள் நடத்தி முடிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவுத் தோ்தலை வரும் நவ. 27-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குரைஞா் ஆனந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

அமைச்சா் மா.சுப்பிரமணியனுடன் மோரீஷஸ் அமைச்சா் சந்திப்பு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்த மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹம்பிராஜன் நரசிம்ஹென் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். செ... மேலும் பார்க்க

சென்னையில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பணிகள் பாதிப்பு: குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் புகாா்

சென்னை மாநகராட்சியில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால், மக்கள் நலத் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவை சோ்ந்த குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை புகாா் தெர... மேலும் பார்க்க