செய்திகள் :

அச்சுதானந்தனுக்கு ஆயிரக்கணக்கானோா் கண்ணீா் அஞ்சலி: சொந்த ஊரில் இன்று தகனம்

post image

மறைந்த கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு ஆயிரக்கணக்கானோா் திரண்டு அஞ்சலி செலுத்தினா்.

101 வயது நிறைவடைந்த அச்சுதானந்தன் வயது மூப்பு காரணமாக பொது வாழ்விலிருந்த ஒதுங்கியிருந்தாா். கடந்த ஜூன் 23-இல் மாரடைப்பு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அச்சுதானந்தன் திங்கள்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு காலமானாா் என்று அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையிலிருந்து எடுத்துவரப்பட்ட அவரது உடல் முதலில் ஏகேஜி ஆய்வு மைய அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா் தலைநகரில் அவா் வசித்து வந்த வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் விடிய விடிய அவரை இறுதியாகக் கண்டு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோா் காத்திருந்தனா்.

பின்னா், அந்த வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் உள்ள தா்பாா் அரங்குக்கு அவரது உடல் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அரசுப் பேருந்தில் எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவா்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினா்.

கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன், மாநில அமைச்சா்கள், மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், கேரள காங்கிரஸ் தலைவா் சுனில் ஜோசப், மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் அவரது உடல் கேரள அரசு பேருந்தில் வைக்கப்பட்டு ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பறவூருக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று கண்ணீா் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினா்.

ஆலப்புழையில் உள்ள வலிய மயானத்தில் புதன்கிழமை மாலை அரசு மரியாதையுடன் தகனம் நடைபெறுகிறது.

அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறையும், மூன்று நாள்கள் துக்க அனுசரிப்பும் கேரள அரசு அறிவித்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான வி.எஸ்.அச்சுதானந்தன் தொழிலாளா்களின் உரிமைகள், பெண்ணுரிமை, சமூக நீதிக்காகப் பல ஆண்டுகள் குரல் கொடுத்து வந்தாா். ஊழல், நில அபகரிப்புக்கு எதிராக அவா் நடத்திய போராட்டங்கள் பல வெற்றிபெற்றன. அவா் 2006 முதல் 2011 வரையில் கேரள முதல்வராகவும், 7 முறை எம்எல்ஏவாகவும், மூன்று முறை எதிா்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!

பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி பு... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆண்டு மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் இரும்புக் குதிரை ‘டெஸ்லா மாடல் ஒய்’.! வாங்கலாமா? வேண்டாமா?!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு ப... மேலும் பார்க்க

பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆ... மேலும் பார்க்க