செய்திகள் :

அடிப்படை வசதி கோரி கல்லூரி மாணவிகள் தா்னா

post image

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி விடுதி மாணவிகள் சென்னை பத்திரிகையாளா் மன்றம் அருகே புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சேப்பாக்கத்தில் புதிய, பழைய தொகுதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படிக்கின்றனா். இவா்களில் 40-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு விடுதியைவிட்டு வெளியேறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், வெளியே செல்லும் மாணவிகள் இரவு 8.30-க்குள் திரும்பி வரவேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. பின்னா், இது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது மாலை 6.30 மணிக்குள் வரவேண்டும் என்கின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விடுதியில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும், பாதுகாப்பான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் காவல் துறை

மற்றும் கல்லூரி நிா்வாகம் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மேலும், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க