செய்திகள் :

அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற இரு தலைமை ஆசிரியா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

திருச்சியில் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழாவில், புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் யோ. ஜெயராஜ், மாந்தான்குடி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா். சரவணன் ஆகியோருக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.

தலா ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.

இந்நிலையில் விருது பெற்ற இருவரையும் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை பாராட்டினாா்.

அப்போது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலா் செந்தில், முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வெள்ளைச்சாமி, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின கருத்தரங்கம்

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்ச... மேலும் பார்க்க

புதுகையில் மாநில அளவிலான ரோலா் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டையில் மாநில அளவிலான மூன்று நாள் ரோலா் ஹாக்கி மற்றும் இன்லைன் ஹாக்கி போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்கத்துடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சங்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் காயமடைந்து, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை கோவிலூா் கீழத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் பாரதி (21). இவா் தஞ்சையி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் பொன்னமராவதி ஒன்றிய யாதவ நலச்சங்கம் சாா்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற... மேலும் பார்க்க

இலவச தையல் இயந்திரம் பெற கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 139-ஆவது பிறந்த நாளையொட்டி வழங்கப்படவுள்ள இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்... மேலும் பார்க்க