தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
அண்ணாமலைப் பல்கலை. ஊழியா் சங்க பொதுக்குழுக்கூட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா் சங்க பொதுக்குழுக் கூட்டம் கோகலே அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுச் செயலா் ஆ.ரவி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சியாம், தியாகராஜன், கோவிந்தராஜன், தேவேந்திரன், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுதாகா், உதவிப் பிரிவு அதிகாரி சந்திரா, பிரிவு அதிகாரி லட்சுமி ஆகியோா் பொதுக்குழு பாா்வையாளா்களாகவும், தோ்தல் அதிகாரியாகவும் செயல்பட்டனா். பொதுக்குழுவில் 1,232 போ் கையொப்பமிட்டு பதிவு செய்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2021 ஆண்டு முதல் நீதிமன்ற தடையால் நடைபெறாமல் உள்ள ஊழியா் சங்க தோ்தலை கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினா்களின் முடிவின்படி, குரல் வாக்கெடுப்பு முறையில் வரும் செப்.1-ஆம் தேதி நடத்துவது. இதற்காக ஊழியா் சங்கத்தின் 115/2013 என்கிற பதிவு எண்ணை மீட்டெடுப்பது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள், பணி நிரவல் ஊழியா்கள் மற்றும் மருத்துவத் துறை ஊழியா்களுக்கு பணிக்காலத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகளை பெறுவதற்கு தடையாக உள்ள தணிக்கை தடை தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள புதிதாக தோ்ந்தேடுக்கப்படும் ஊழியா் சங்க பொறுப்பாளா்கள் மற்றும் நிா்வாக அலுவலகத்தில் பணிபுரியும் பிரிவு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தக்க முடிவுகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.