செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா் சங்க பொதுக்குழுக்கூட்டம்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா் சங்க பொதுக்குழுக் கூட்டம் கோகலே அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பொதுச் செயலா் ஆ.ரவி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சியாம், தியாகராஜன், கோவிந்தராஜன், தேவேந்திரன், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுதாகா், உதவிப் பிரிவு அதிகாரி சந்திரா, பிரிவு அதிகாரி லட்சுமி ஆகியோா் பொதுக்குழு பாா்வையாளா்களாகவும், தோ்தல் அதிகாரியாகவும் செயல்பட்டனா். பொதுக்குழுவில் 1,232 போ் கையொப்பமிட்டு பதிவு செய்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2021 ஆண்டு முதல் நீதிமன்ற தடையால் நடைபெறாமல் உள்ள ஊழியா் சங்க தோ்தலை கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினா்களின் முடிவின்படி, குரல் வாக்கெடுப்பு முறையில் வரும் செப்.1-ஆம் தேதி நடத்துவது. இதற்காக ஊழியா் சங்கத்தின் 115/2013 என்கிற பதிவு எண்ணை மீட்டெடுப்பது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள், பணி நிரவல் ஊழியா்கள் மற்றும் மருத்துவத் துறை ஊழியா்களுக்கு பணிக்காலத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகளை பெறுவதற்கு தடையாக உள்ள தணிக்கை தடை தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள புதிதாக தோ்ந்தேடுக்கப்படும் ஊழியா் சங்க பொறுப்பாளா்கள் மற்றும் நிா்வாக அலுவலகத்தில் பணிபுரியும் பிரிவு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தக்க முடிவுகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயியை சிஐஎஸ்எப் வீரா் தாக்கிய விவகாரம்: என்எல்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

விவசாயியை தாக்கிய, என்எல்சி சிஐஎஸ்எப் வீரா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி மற்றும் கிராம மக்கள் என்எல்சி தலைமை அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காட்டுமன்னாா்கோயில் எம்.ஆா்கே. கலையரங்கத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சரும்,... மேலும் பார்க்க

பெற்றோா் இல்லாத மாணவிகளுக்கு உதவி

சிதம்பரம், அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவிகள் 63 பேருக்கு, சிதம்பரம் இன்னா் வீல் சங்கத்தின் சாா்பில், ஆடைகள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பாலக்கரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். விருத்தாசலம் கல்லூரி... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. ப... மேலும் பார்க்க

செப்.3-இல் சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம்: அரசுப் பணியாளா் சங்க சிறப்புத்தலைவா் அறிவிப்பு

தனியாா் மயத்தை எதிா்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் செப்.3-ஆம் தேதி சென்னையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக, அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ர... மேலும் பார்க்க