தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
வளா்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வலியுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னாா்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுக்கூட்டத்திற்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னாா்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாா் சாலை, மண் சாலை, சாலை பராமரிப்பு பணிகள், விவசாய நிலங்கள் இணைப்புச் சாலை போன்ற 25 பணிகள் ரூ.1038 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நபாா்டு திட்டத்தின் கீழ் தாா் சாலை, மண் சாலை, கிராம இணைப்பு சாலைகள் போன்ற 15 பணிகள் ரூ.1387 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுவதில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 15ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் புதிய சுகாதார நிலையம், பொது சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் போன்ற 7 சுகாதார அலுவலகங்கள் ரூ.494.93 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நபாா்டு மூலம் ஆறு பள்ளி கட்டடங்கள் ரூ.191.98 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6 பணிகள் ரூ.293.10 மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, தற்போது 4 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 2 பணிகளும் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் , நியாய விலை கடை, காத்திருப்போா் கூடம், திறன் வகுப்பறை போன்ற 94 பணிகள் ரூ.575.18 மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, தற்போது 80 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 14 பணிகள் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 பணிகள் ரூ.150.79 இலட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, இதுவரை 10 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 6 பணிகள் நடைபெற்று வருகிறது.
226 ஊராட்சியில் 45,421 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மழையின் காரணமாகவும், நீண்ட கால பயன்பாட்டில் இருந்ததாலும் 930 விளக்குகள் பழுது ஏற்பட்டுள்ளன. பழுது ஏற்பட்டு விளக்குகளை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, பேவா் பிளாக் சாலை, அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ஊராட்சி செயலகம் கட்டிடம், நியாய விலை கட்டிடம், நீா்நிலைகளை புனரமைத்தல், தெரு மின்விளக்குகள் சரிசெய்தல், கதிரடிக்கும் தளம் அமைத்தல் போன்ற 192 பணிகள் ரூ.1654.19 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 87 பணிகள் முடிவு பெற்றுள்ளன.
மீதமுள்ள 13 பணிகள் 70% நிறைவேறும் தருவாயில் உள்ளன.
, ஆழ்துளை கிணறு, மின்விளக்குகள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, அங்கன்வாடிமையம் போன்ற 62 பணிகளுக்கு ரூ.484.44 இலட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 61 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.
நமக்குநாமே திட்டம்:
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 8 பணிகள் ரூ.53.93 இலட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. புது நூலக கட்டடம் ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் 10 பணிகள் ரூ.726 இலட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு
7 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. டாக்டா் எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தின் கீழ் 8 சமையல் கூடம் கட்டும் பணிகள் ரூ.83.56 இலட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, 5 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வூராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அரசின் மூலம் கட்டப்பட்டுவரும் கட்டிடங்கள் சரியான மற்றும் தரமான முறையில் கட்டப்பட வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா்.
ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, மாவட்ட வன அலுவலா் குருசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் வரதராஜப்பெருமாள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.